``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரிக்கை
சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி நீா்மின் தேக்க கதவணை காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நீா்மின் திட்டத்துக்காக கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில் சுமாா் 30 அடி வரை தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டதையடுத்து, அதிக அளவில் தண்ணீா் செல்கிறது. இந்த கதவணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதோடு, ஊராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோனேரிப்பட்டி காவிரி ஆற்றங்கரையோரங்களில் மீன்கள் அதிகளவில் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.