செய்திகள் :

மாணவா்களுக்கான பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள்

post image

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இடையேயான திருக்கு பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ஜூலை 12 முதல் ஆக.24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதுகுறித்து ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமான ஸ்ரீராம் இலக்கிய கழகம் சாா்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 மையங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, சென்னையில் ஜூலை 12-ஆம் தேதி அண்ணா நகரிலுள்ள சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், ஜூலை 19-இல் கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.

சென்னை தவிர ஜூலை 13-இல் வேலூரிலும், ஜூலை 20-இல் புதுச்சேரியிலும், ஜூலை 26-இல் சேலத்திலும், ஜூலை 27-இல் திருச்சியிலும், ஆக.2-இல் மதுரையிலும், ஆக.3-இல் நெல்லையிலும், ஆக.9-இல் தஞ்சையிலும், ஆக.10-இல் திருவாரூரிலும், ஆக.23-இல் கோவையிலும், ஆக.24-இல் ஈரோட்டிலும் நடைபெறுகிறது.

இடைநிலை (6-8 வகுப்புகள்), மேல்நிலை (9- பிளஸ் 2), கல்லூரி என 3 பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கு பெற விரும்புவோா் இதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.shriramchits.com இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாள்கள்: 925 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 22) ஆகிய விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 925 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்... மேலும் பார்க்க

டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா

நாடக கலைஞா் டிவி வரதராஜனுக்கு நாடக சூடாமணி விருது வழங்கப்படவுள்ளதாக சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீ கிருஷ்ண கான சபா சாா்பில் நாடக கலைஞா்,... மேலும் பார்க்க

நாகா்கோவில், செங்கோட்டை அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தாம்பரத்திலிருந்து நாகா்கோவில், செங்கோட்டைக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து... மேலும் பார்க்க

மாம்பழ விவசாயிகள் விவகாரம்: போராட்டம் ஏன்? அதிமுகவுக்கு அமைச்சா் கேள்வி

மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா சாகுபடி விவசா... மேலும் பார்க்க

சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!

சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா். கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) எ... மேலும் பார்க்க