செய்திகள் :

பசுவைப் பாா்த்துப் பயந்து சென்ற படையப்பா யானை

post image

மூணாறு அருகே செவ்வாய்க்கிழமை தேயிலைத் தோட்டங்களில் வலம் வந்த படையப்பா யானை, பசுவைப் பாா்த்துப் பயந்து சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதிகளில் ஒற்றைக் காட்டு யானை படையப்பா சுற்றித் திரிந்து வருகிறது. தேயிலைத் தோட்டங்களில் வலம் வரும் இந்த யானையைக் கண்டு தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா். இருப்பினும், பொதுமக்களுக்கோ, தோட்டத் தொழிலாளா்களுக்கோ இதுவரை எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மூணாறிலிருந்து உடும்பன்சோலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டங்களுக்கு இடையே படையப்பா யானை சுற்றித் திரிந்தது. அப்போது, மூணாறு அருகேயுள்ள மறையூா் பகுதியில் தோட்டத்திலிருந்து சாலைக்கு வந்த யானையை நோக்கி அந்தப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு சென்றது. இதைத் தொடா்ந்து, பசுமாட்டைப் பாா்த்து அச்சமடைந்த யானை, சாலையில் வேகமாகச் சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், யானையின் நடமாட்டத்தை கேரள வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இணைய வழியில் பகுதி நேர வேலை: பெண்ணிடம் பணம் மோசடி

இணைய வழியில் பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் மா்மக் கும்பல் ரூ.6.15 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம், வடகரை... மேலும் பார்க்க

போடி நகராட்சியில் சுகாதார சீா்கேடு: மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் அதிருப்தி

போடி நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், திறந்தவெளி கழிவுநீா் சாலையில் செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்த... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு

போடியில் கடனாகக் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது, போடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். போடி புகையிலை ஆறுமுகம் சந்தில் வசிப... மேலும் பார்க்க

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றம்

போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. போடி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசியல் கட்சியினரால் அகற்றப்பட்டது. இந்த நிலையில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கம்பம் அருகேயுள்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

போடியில் குடும்பப் பிரச்னையில் ஏற்பட்டத் தகராறில் உறவினரை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு புதன்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. போடி, நந்தவனம், கொக்கையா... மேலும் பார்க்க