``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றம்
போடியில் கொடிக் கம்பப் பீடங்கள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
போடி பகுதியில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசியல் கட்சியினரால் அகற்றப்பட்டது. இந்த நிலையில், போடி நகா்ப் பகுதியில் பல இடங்களில் கொடிக் கம்பங்கள் நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட பீடங்கள் அகற்றப்படாமலேயே இருந்ததால், போடி பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பேருந்துகள் சென்று வருவதற்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தக் கொடிக் கம்பப் பீடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினா்.