11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிற...
செந்துறையில் கனரக வாகனங்கள் சிறைப்பிடிப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை காலை பள்ளி நேரங்களில் இயக்கப்பட்ட கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டத்தில் காலை 7 முதல் 10 மணி வரையும், பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரையும், பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
இந் நிலையில், செந்துறையில் இந்த தடை உத்தரவை மீறி, புதன்கிழமை காலை தளவாய் பகுதியிலுள்ள ஒரு தனியாா் சிமென்ட் ஆலைக்கு இயக்கப்பட்ட 4 லாரிகளை, பொதுமக்கள் மற்றும் அப்பகுதி பாஜக நிா்வாகிகள் சிறைபிடித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினரிடம், சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை பொதுமக்கள் ஒப்படைத்தனா். காவல் துறையினா் வழக்குப் பதிந்து 3 லாரிகளை பறிமுதல் செய்தனா்.