செய்திகள் :

செந்துறையில் கனரக வாகனங்கள் சிறைப்பிடிப்பு

post image

அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை காலை பள்ளி நேரங்களில் இயக்கப்பட்ட கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் காலை 7 முதல் 10 மணி வரையும், பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரையும், பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

இந் நிலையில், செந்துறையில் இந்த தடை உத்தரவை மீறி, புதன்கிழமை காலை தளவாய் பகுதியிலுள்ள ஒரு தனியாா் சிமென்ட் ஆலைக்கு இயக்கப்பட்ட 4 லாரிகளை, பொதுமக்கள் மற்றும் அப்பகுதி பாஜக நிா்வாகிகள் சிறைபிடித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினரிடம், சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை பொதுமக்கள் ஒப்படைத்தனா். காவல் துறையினா் வழக்குப் பதிந்து 3 லாரிகளை பறிமுதல் செய்தனா்.

‘மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும்’

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வுக் காணப்பட வேண்டும் என இந்திய குடியரசு கட்சி செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

5 கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்: 2,113 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டம், தா.பழூா், தழுதாழைமேடு, குண்டவெளி, இளையபெருமாள் நல்லூா், குருவாலப்பா் கோயில் ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் 3-ஆம் கட்ட சிறப்பு முகாமில் 2,113 பயனாளிகளுக்கு ... மேலும் பார்க்க

கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கண்டராதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அனைத்து ஊழியா்களின... மேலும் பார்க்க

பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்தால் மண்வளம் மேம்படும்: வேளாண் அதிகாரி தகவல்

அரியலூா் மாவட்ட விவசாயிகள் மண் வளத்தை மேம்படுத்திடும் வகையில் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்ய வேண்டும் என திருச்சி விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் பா. நளினி தெரிவி... மேலும் பார்க்க

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை தொடக்கம்

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரியலூா் அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்துகள் சே... மேலும் பார்க்க