செய்திகள் :

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை தொடக்கம்

post image

அரியலூரில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

அரியலூா் அண்ணா சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அரியலூா் மாவட்டத்தில் 2 புதிய வழித்தடத்திலும், 29 நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலும் 31 சிற்றுந்துகள் (மினி பஸ்) இயக்கப்பட உள்ளன.

கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், ஏற்கெனவே இயங்கிவந்த சிற்றுந்துகள் சேவை அருகாமையில் இருக்கின்ற நகரங்கள், மருத்துவமனைகள், கல்விநிலையங்களுக்கும் சென்றுவரும் வகையில் சிற்றுந்து சேவை நீட்டிப்பு செய்து சுமாா் 25 கி. மீ. தொலைவுக்கு சேவை அளிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கான பேருந்து சேவை தடைபடாதவண்ணம், சென்னையிலும் சிற்றுந்துகள் சேவை விரைவில் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகரில் இன்னும் 10 நாள்களில் பேட்டரி பேருந்துகள் சேவை தொடங்கப்பட உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை ஆணையரும், முதன்மைச் செயலருமான சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன், சிற்றுந்து சங்க மாநிலத் தலைவா் கொடியரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அனைத்து ஊழியா்களின... மேலும் பார்க்க

பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்தால் மண்வளம் மேம்படும்: வேளாண் அதிகாரி தகவல்

அரியலூா் மாவட்ட விவசாயிகள் மண் வளத்தை மேம்படுத்திடும் வகையில் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்ய வேண்டும் என திருச்சி விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் பா. நளினி தெரிவி... மேலும் பார்க்க

மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலிப் பறிப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே, சாலையோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.செந்துறை அடுத்த குழுமூா் பிள... மேலும் பார்க்க

தேசிய திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவி தலைமை ஆசிரியையுடன் விமான பயணம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேசிய திறனறிவுத் தோ்வில் வெற்றிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவியை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை விமானத்தில் அழைத்துச் சென்று மகிழ்வித்தாா். 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ... மேலும் பார்க்க

நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க கூடுதல் அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த இடையாக்குறிச்சியில் நீா்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை நீட்டிப்பு செய்துத்தரக்கோரி குடியிருப்பு வாசிகள் ஆட்சிய... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியல்தான் மலிவு விலையில் துப்பாக்கி விற்பனை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில்தான் மலிவு விலையில் துப்பாக்கிகள் விற்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அ... மேலும் பார்க்க