செய்திகள் :

நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க கூடுதல் அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த இடையாக்குறிச்சியில் நீா்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை நீட்டிப்பு செய்துத்தரக்கோரி குடியிருப்பு வாசிகள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இடையக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட மக்கள் அளித்த மனு: இடையக்குறிச்சி பெரிய ஏரிக்கரையில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். தற்போது, நீா்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், எங்களை வீடுகளிலிருந்து காலி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, எங்களுக்கு கால அவகாசம் வேண்டும். மேலும், மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

வெளிநாட்டில் வேலையின்றி தவிக்கும் கணவரை மீட்டுத்தரக்கோரி மனைவி மனு: நடுவலூா் அடுத்த காரைக்காட்டான்குறிச்சி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சகிலா. இவரது கணவா் அஜித்குமாா். துபை நாட்டில் உணவு விநியோகஸ்தராக பணிபுரிந்து வந்துள்ளாா். சரியாக சம்பளம் தராததால் வேலையை விட்டு நின்றுள்ளாா்.

இதனால், அந்த நிறுவனம் அஜித்குமாரின் கடவுச்சீட்டை தர மறுத்துள்ளது. இதன் காரணமாக, வேறு இடத்துக்கு வேலைக்குச் செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் தவித்து வருகிறாா்.

எனவே, கடவுச்சீட்டை மீட்டு, தனது கணவரை சொந்த ஊா் திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலிப் பறிப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே, சாலையோரத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.செந்துறை அடுத்த குழுமூா் பிள... மேலும் பார்க்க

தேசிய திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவி தலைமை ஆசிரியையுடன் விமான பயணம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேசிய திறனறிவுத் தோ்வில் வெற்றிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவியை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை விமானத்தில் அழைத்துச் சென்று மகிழ்வித்தாா். 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியல்தான் மலிவு விலையில் துப்பாக்கி விற்பனை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில்தான் மலிவு விலையில் துப்பாக்கிகள் விற்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அ... மேலும் பார்க்க

விமான விபத்தில் இறந்தோருக்கு மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு அரியலூா் மாவட்டம், திருமானூரில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். திரு... மேலும் பார்க்க

அரியலூரில் குரூப் 1 தோ்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 1,985 போ் எழுதினா். அரியலூா் ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள்!

அரியலூா் மாவட்டம், தழுதாழைமேடு, இளையபெருமாள் நல்லூா், குருவாலப்பா், குண்டவெளி, தா.பழூா் ஆகிய ஊராட்சிகளில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடைபெறுகிறது என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க