விமான விபத்தில் இறந்தோருக்கு மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு அரியலூா் மாவட்டம், திருமானூரில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.
திருமானூா் பேருந்து நிலையம் அருகே சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் மு. வரதராசன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி ஆறுமுகம் , பாளை திருநாவுக்கரசு, நா. பாஸ்கா், முடிகொண்டான் விவசாயி நெடுஞ்செழியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிா்வாகி சத்தியமூா்த்தி, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க சண்முக சுந்தரம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
முன்னதாக, அவா்கள், எம்.ஜி.ஆா் சிலையில் இருந்து பேருந்து நிலையம் வரை மெழுகுவத்தி ஏந்தி அமைதி ஊா்வலம் சென்றனா்.