தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், அனைத்து ஊழியா்களின் கோரிக்கைகளுக்காக போராடிய சங்க மாநில நிா்வாகிகள் பாக்கியமேரி, மணிமேகலை இருவரையும் பழிவாங்கும் நோக்கில் தற்காலிக பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 6 ஆண்டுகளாக புதிய கைப்பேசி வழங்காத 22 மாவட்டங்களுக்கு உடனடியாக புதிய கைப்பேசியை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடி ஊழியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.ராஜாமணி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ்.ரத்தினமாலா கண்டன உரையாற்றினாா். இதில், நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.