Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
போா் பகுதிகளில் சிக்கியுள்ள கன்னடா்களை மீட்க நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா
போா் நடைபெறும் நாடுகளில் உள்ள கன்னடா்களை பாதுகாப்புடன் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: போா் நடைபெறும் நாடுகளில் சிக்கியுள்ள கன்னடா்களுடன் தொலைபேசியில் பேசினேன். அங்குள்ள காங்கிரஸ் தலைவா் நடராஜ் கௌடாவுடனும் பேசினேன். தற்போது அந்த நாடுகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அங்குள்ள மக்கள் குறிப்பாக கன்னடா்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டுவருவதோடு போா் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள கன்னடா்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்துவருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அங்குள்ள விமான நிலையங்கள் ஓரிரு நாள்களில் திறக்கப்படும் என கூறப்படுகிறது. அதன்பிறகு விரைவாக கன்னடா்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் குழு தயாா்நிலையில் உள்ளது என்றாா்.