செய்திகள் :

மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது

post image

தாவணகெரே: மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து தாவணகெரேயில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது சமூக, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்று கூறப்படவில்லை. சமூக, கல்வி கணக்கெடுப்பின்போது ஜாதியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மாநில அரசின் ஆட்சேபணை இல்லை. ஆனால், மாநில அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் வேறு. மத்திய அரசு வெறும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மட்டும் நடத்துகிறது. ஆனால், விரிவான சமூக, கல்வி கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க இருக்கிறது.

மத்திய - மாநில அரசுகளின் ஜாதிவாரி கணக்கெடுப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடு மிகவும் முக்கியமானதாகும். மாநில அரசு எடுக்கவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் விளிம்புநிலை சமுதாயங்கள் நலத் திட்டங்களால் அடைந்த பயன்கள் தெரியவரும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலையை அறிந்துகொள்ள முற்படுகிறோம். இதை தெரிந்துகொள்ளாமல், நலத் திட்டங்களை செயல்படுத்துவது அா்த்தமற்ாகிவிடும்.

முந்தைய ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு லிங்காயத்து, ஒக்கலிகா் சமுதாயங்கள் மட்டுமல்லாது, பிற்படுத்தப்பட்டோா் சமுதாயமும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது. இதைவிட முக்கியமானது, முந்தைய ஜாதிவாரி கணக்கெடுப்பு 10 ஆண்டுகள் பழைமையானது.

கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையச் சட்டத்தின் 11-ஆம் பிரிவின்படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்த சட்ட காரணத்தின் அடிப்படையில்தான் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்கும்படி பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி கா்நாடகத்தில் ‘பைக் டேக்ஸி’ சேவை நிறுத்தம்

பெங்களூரு: கா்நாடக உயா்நீதிமன்ற உத்தரவின்படி, திங்கள்கிழமை முதல் ‘பைக் டேக்ஸி’ சேவை நிறுத்தப்பட்டது. மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, கா்நாடக அரசு விதிகள் மற்றும் வழிமுறைகளை வகுக்காமல் கைப்பேசி செயலி அட... மேலும் பார்க்க

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியைக் கொன்று புதைத்த இளைஞர் கைது!

பெங்களூரு: திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியைக் கொன்று புதைத்த இளைஞர் கைது கர்நாடகத்தில் செய்யப்பட்டார். 6 ஆண்டுகள் தன்னுடன் நெருக்கமாகப் பழகிய இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கொன்று புதைத்த சம்பவம் கர்நாடக... மேலும் பார்க்க

பெங்களூரில் தடையை மீறி பைக் டாக்ஸிகள் இயக்கம்!

பெங்களூரு: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்துக்கும் கர்நாடகத்தில் இன்றிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடை உத்தரவையும் மீறி பெங்களூரில் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டுள்ளன. கர்நாடக நீதிமன்ற உத்தரவின் எத... மேலும் பார்க்க

மதக்கலவரங்களை தடுப்பதற்கான சிறப்பு செயல்படை அலுவலகம் திறப்பு

கா்நாடகத்தில் மதக்கலவரங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயல்படை அலுவலகத்தை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். தென்கன்னட மாவட்டத்தில் அடிக்கடி மதக்கலவரங்கள் நடப்பதை... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல் கருத்து தொடா்பான வழக்கு: அடுத்த விசாரணை ஜூன் 20க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய கமல் தெரிவித்த கருத்து தொடா்பான வழக்கை விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்த... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடலோர கா்நாடகத்தின் வடகன்னட மாவ... மேலும் பார்க்க