மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!
உயா்நீதிமன்ற உத்தரவின்படி கா்நாடகத்தில் ‘பைக் டேக்ஸி’ சேவை நிறுத்தம்
பெங்களூரு: கா்நாடக உயா்நீதிமன்ற உத்தரவின்படி, திங்கள்கிழமை முதல் ‘பைக் டேக்ஸி’ சேவை நிறுத்தப்பட்டது.
மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, கா்நாடக அரசு விதிகள் மற்றும் வழிமுறைகளை வகுக்காமல் கைப்பேசி செயலி அடிப்படையிலான ‘பைக் டேக்ஸி’ சேவைகளை நிறுத்துவதற்கு 6 வாரகாலம் கெடுவிதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் ஏப். 2-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பின்னா், இந்த காலக்கெடுவை ஜூன் 15-ஆம் தேதிவரை நீட்டித்து உயா்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இதை எதிா்த்து உபொ் இந்தியா நிறுவனம், ஏ.என்.ஐ. டெக்னாலஜீஸ் நிறுவனம் (ஓலா சேவை) ஆகியவை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) வி.காமேஷ்வா் ராவ், நீதிபதி சீனிவாஸ் ஹரீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. விதிகள் மற்றும் வழிமுறைகளை வகுப்பதாக மாநில அரசு உறுதி அளித்தால், தடையை நீக்கும் உத்தரவை பிறப்பிக்கலாம் என்று உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
ஆனால், விதிகள் மற்றும் வழிமுறைகளை வகுப்பதில்லை என்று கொள்கை முடிவு எடுத்திருப்பதாக மாநில அரசு தரப்பு வழக்குரைஞா் தெரிவித்துவிட்டதால், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், இது தொடா்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் இயக்கப்பட்டு வந்த ‘பைக் டேக்ஸி’ சேவைகளுக்கு மாநில அரசு தடைவிதித்துள்ளது. அதன்படி, ‘பைக் டேக்ஸி’ சேவை திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டது. இதை ரேப்பிடோ சேவை நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி கூறுகையில்,‘பைக் டேக்ஸி சேவை சட்டவிரோதமானது என்று 3 மாதங்களுக்கு முன்பே கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சேவையை நிறுத்துவதற்கு முதலில் 6 வாரங்களுக்கு கெடு அளித்திருந்த உயா்நீதிமன்றம், அந்தக் கெடுவை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்திருந்தது. எனவே, கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவை பைக் டேக்ஸி சேவையை வழங்கி வந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.