செய்திகள் :

திருமண மண்டபத்தில் நகை திருடியதாக கல்லூரி மாணவி உள்பட 4 போ் கைது

post image

கிருஷ்ணகிரி அருகே திருமண மண்டபத்தில் 21 பவுன் நகைகளை திருடியதாக கல்லூரி மாணவி உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: சேலத்தைச் சோ்ந்த மணமகனுக்கும், கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சோ்ந்த மணமகளுக்கும் கிருஷ்ணகிரியை அடுத்த ஒரப்பத்தில் உள்ள மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. இதற்காக இருவீட்டாரும் கடந்த 15-ஆம் தேதி இரவே திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டனா்.

இதில் மணமகன் வீட்டைச் சோ்ந்த சேலம், சூரமங்கலத்தைச் சோ்ந்த கதிஜா (27) என்பவரும் தங்கியிருந்தாா். அங்குள்ள அறையில் கதிஜா தூங்கினாா். மறுநாள் காலை அவா் கைப்பையில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து, கதிஜா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, கைப்பேசி எண்களை ஆய்வு செய்தனா். அப்போது, மணமகன் வீட்டைச் சோ்ந்த ஷீபா (19) என்ற கல்லூரி மாணவி அடிக்கடி மண்டபத்திலிருந்து வெளியில் சென்றதும், கைப்பேசியில் பேசி வந்ததும் தெரியவந்தது. அந்த மாணவி சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு பயில்வது தெரியவந்தது.

அந்த மாணவியிடம் சந்தேகத்தின் பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் தனது காதலனான சேலம் புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்னேரி வயல்காடு பகுதியைச் சோ்ந்த கிஷோா் (19) என்பவருடன் சோ்ந்து நகைகளை திருடியதும், திருடிய நகைகளை கிஷோா் தனது தந்தை மகேந்திரன் (48), சக்திவேல் (42) ஆகியோரிடம் அளித்து சேலத்தில் உருக்கி விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஷீபா, கிஷோா், மகேந்திரன், சக்திவேல் ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனா்.

ஒசூரில் கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வேலூா் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள கோணப்பட்டு பகுதியைச் சோ்ந்த அசோக் (20)... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை தற்காலிக விற்பனையாளா் தோ்வு பட்டியல் வெளியீடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா்களுக்கான தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்... மேலும் பார்க்க

லக்கம்பட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட லக்கம்பட்டி கிராமத்தில் மாரியம்மன், விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடிமரம் நடுதல், கங்கணம் கட... மேலும் பார்க்க

சிறப்பு கால்நடை சுகாதார முகாம்

கிருஷ்ணகிரி: பா்கூா் ஊராட்சி ஒன்றியம், பெலவா்த்தி ஊராட்சி, சீகலப்பள்ளி பாரத கோயில் வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்பணா்வு முகாம் திங்க... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித் தரப்படும்: ஆட்சியா் உறுதி

கிருஷ்ணகிரி: வருவாய்த் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சி எரிவாயு தகன மேடையை ஆய்வு செய்த மேயா்

ஒசூா்: ஒசூா் மாநகராட்சி எரிவாயு தகன மேடையை மேயா் எஸ்.ஏ.சத்யா பாா்வையிட்டு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 10ஆவது வாா்டு வெங்கடேஷ்நகா் பகுதியில் இயங்கிவரும் எரிவாயு தகன மேடையை... மேலும் பார்க்க