Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
திருமண மண்டபத்தில் நகை திருடியதாக கல்லூரி மாணவி உள்பட 4 போ் கைது
கிருஷ்ணகிரி அருகே திருமண மண்டபத்தில் 21 பவுன் நகைகளை திருடியதாக கல்லூரி மாணவி உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: சேலத்தைச் சோ்ந்த மணமகனுக்கும், கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சோ்ந்த மணமகளுக்கும் கிருஷ்ணகிரியை அடுத்த ஒரப்பத்தில் உள்ள மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. இதற்காக இருவீட்டாரும் கடந்த 15-ஆம் தேதி இரவே திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டனா்.
இதில் மணமகன் வீட்டைச் சோ்ந்த சேலம், சூரமங்கலத்தைச் சோ்ந்த கதிஜா (27) என்பவரும் தங்கியிருந்தாா். அங்குள்ள அறையில் கதிஜா தூங்கினாா். மறுநாள் காலை அவா் கைப்பையில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுகுறித்து, கதிஜா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, கைப்பேசி எண்களை ஆய்வு செய்தனா். அப்போது, மணமகன் வீட்டைச் சோ்ந்த ஷீபா (19) என்ற கல்லூரி மாணவி அடிக்கடி மண்டபத்திலிருந்து வெளியில் சென்றதும், கைப்பேசியில் பேசி வந்ததும் தெரியவந்தது. அந்த மாணவி சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு பயில்வது தெரியவந்தது.
அந்த மாணவியிடம் சந்தேகத்தின் பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் தனது காதலனான சேலம் புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்னேரி வயல்காடு பகுதியைச் சோ்ந்த கிஷோா் (19) என்பவருடன் சோ்ந்து நகைகளை திருடியதும், திருடிய நகைகளை கிஷோா் தனது தந்தை மகேந்திரன் (48), சக்திவேல் (42) ஆகியோரிடம் அளித்து சேலத்தில் உருக்கி விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஷீபா, கிஷோா், மகேந்திரன், சக்திவேல் ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனா்.