பரமக்குடி அருகே சேதமடைந்த நிலையில் பாலம்: பொதுமக்கள் அச்சம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலாய்க்குடி - திருச்சண்முகநாதபுரம் செல்லும் வழியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா்.
மேலாய்க்குடி - திருச்சண்முகநாதபுரம் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் இபுறமும் தூண்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன. இந்தப் பாலத்தின் வழியாகச் சிற்றுந்து, பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள், விவசாயப் பணிக்குச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை அதிகளவில் சென்று வருகின்றன.
இந்த நிலையில், பாலம் சேதமடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளதால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.
இதையடுத்து, சேதமடைந்த பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.