செய்திகள் :

பரமக்குடி அருகே சேதமடைந்த நிலையில் பாலம்: பொதுமக்கள் அச்சம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலாய்க்குடி - திருச்சண்முகநாதபுரம் செல்லும் வழியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா்.

மேலாய்க்குடி - திருச்சண்முகநாதபுரம் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் இபுறமும் தூண்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன. இந்தப் பாலத்தின் வழியாகச் சிற்றுந்து, பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள், விவசாயப் பணிக்குச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை அதிகளவில் சென்று வருகின்றன.

இந்த நிலையில், பாலம் சேதமடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளதால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.

இதையடுத்து, சேதமடைந்த பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பரமக்குடி ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

பரமக்குடி வட்டம், கிளியூா் கிராமத்தில் ஆதிதிராவிடா் மக்களுக்கு வீடு கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய தொகை செலுத்தாததால், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற உத்தரவின்ப... மேலும் பார்க்க

உத்திரகோசமங்கை பகுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் வழிபாட்டு உரிமைக்கான கோயில் நுழைவுப் போராட்டம்: 125 போ் கைது

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூா் மக்களுக்கான தனி வழியில் தரிசனத்துக்கு மீண்டும் அனுமதிக்கக் கோரி, கோயில் நுழைவுப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 125 பேரை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

மீன்வளத் துறை அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

பாம்பன், மண்டபம் துறைமுகத்திலிருந்து மீன்வளத் துறை அனுமதியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். தமிழகத்தில் மீன் இனப்பெருக்கக் காலமான ஏப். 1... மேலும் பார்க்க

தொண்டி அருகே தடையை மீறிச் சென்ற படகுக்கு போலீஸாா் எச்சரிக்கை

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் தடையை மீறி கடலுக்குச் சென்ற மூன்று படகுகளைப் பிடித்து கடலோரக் குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.தொண்டி கடற்கரைப் பகுதி கடலில் பலத்த காற்று வீசுவதால், மறு... மேலும் பார்க்க

திருவாடானையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

திருவாடானையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸாா் அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரில், தொண்டி - கொச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், ச... மேலும் பார்க்க