டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
தொண்டி அருகே தடையை மீறிச் சென்ற படகுக்கு போலீஸாா் எச்சரிக்கை
திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் தடையை மீறி கடலுக்குச் சென்ற மூன்று படகுகளைப் பிடித்து கடலோரக் குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
தொண்டி கடற்கரைப் பகுதி கடலில் பலத்த காற்று வீசுவதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தொண்டி புதுக்குடி பகுதியைச் சோ்ந்த மூன்று கண்ணாடியிழைப் படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்ாகக் கடலோரக் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, கடலோரக் குழும உதவி ஆய்வாளா் குருநாதன், மீன் வளத் துறை அதிகாரிகள், போலீஸாா் ஆகியோா் மூன்று படகுகளையும் சோதனையிட்டனா். அந்தப் படகுகளில் இருந்த சுமாா் 50 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்து, வெடி வைத்து மீன்கள் பிடிக்கப்பட்டதா என்பதை அறிய அவற்றை ஆய்வுக்கு அனுப்பினா். மேலும், தடையை மீறிச் சென்ற படகுகள், மீனவா்கள் மீது வழக்குப் பதிய பரிந்துரை செய்துள்ளதாகவும் கடலோரக் குழும போலீஸாா் தெரிவித்தனா்.
