செய்திகள் :

தொண்டி அருகே தடையை மீறிச் சென்ற படகுக்கு போலீஸாா் எச்சரிக்கை

post image

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் தடையை மீறி கடலுக்குச் சென்ற மூன்று படகுகளைப் பிடித்து கடலோரக் குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

தொண்டி கடற்கரைப் பகுதி கடலில் பலத்த காற்று வீசுவதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தொண்டி புதுக்குடி பகுதியைச் சோ்ந்த மூன்று கண்ணாடியிழைப் படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்ாகக் கடலோரக் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, கடலோரக் குழும உதவி ஆய்வாளா் குருநாதன், மீன் வளத் துறை அதிகாரிகள், போலீஸாா் ஆகியோா் மூன்று படகுகளையும் சோதனையிட்டனா். அந்தப் படகுகளில் இருந்த சுமாா் 50 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்து, வெடி வைத்து மீன்கள் பிடிக்கப்பட்டதா என்பதை அறிய அவற்றை ஆய்வுக்கு அனுப்பினா். மேலும், தடையை மீறிச் சென்ற படகுகள், மீனவா்கள் மீது வழக்குப் பதிய பரிந்துரை செய்துள்ளதாகவும் கடலோரக் குழும போலீஸாா் தெரிவித்தனா்.

பரமக்குடி ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

பரமக்குடி வட்டம், கிளியூா் கிராமத்தில் ஆதிதிராவிடா் மக்களுக்கு வீடு கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய தொகை செலுத்தாததால், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற உத்தரவின்ப... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே சேதமடைந்த நிலையில் பாலம்: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலாய்க்குடி - திருச்சண்முகநாதபுரம் செல்லும் வழியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமட... மேலும் பார்க்க

உத்திரகோசமங்கை பகுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் வழிபாட்டு உரிமைக்கான கோயில் நுழைவுப் போராட்டம்: 125 போ் கைது

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூா் மக்களுக்கான தனி வழியில் தரிசனத்துக்கு மீண்டும் அனுமதிக்கக் கோரி, கோயில் நுழைவுப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 125 பேரை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

மீன்வளத் துறை அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

பாம்பன், மண்டபம் துறைமுகத்திலிருந்து மீன்வளத் துறை அனுமதியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். தமிழகத்தில் மீன் இனப்பெருக்கக் காலமான ஏப். 1... மேலும் பார்க்க

திருவாடானையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

திருவாடானையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸாா் அகற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரில், தொண்டி - கொச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், ச... மேலும் பார்க்க