செய்திகள் :

திருவாடானையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

post image

திருவாடானையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸாா் அகற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரில், தொண்டி - கொச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், சாலையோரங்களில் அனுமதியின்றி வணிக நிறுவனங்கள் தங்களது விளம்பரப் பதாகைகளை வைத்திருந்தனா். இந்தப் பதாகைகள் சாலையின் பெரும் பகுதியை மறைத்ததோடு மட்டுமன்றி, போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்தது.

விளம்பரப் பதாகைகளை அகற்றிய போலீஸாா்

குறிப்பாக, இந்த விளம்பரப் பதாகைகள் சாலையின் பெரும் பகுதியை மறைத்ததாலும், வாகன ஓட்டிகள் எதிரில் வரும் பிற வாகனங்களைக் கவனிக்க முடியாததாலும், அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன.

இதையடுத்து, இந்த விளம்பரப் பதாகைகளை அகற்ற சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்த நிலையில், திருவாடானை காவல் ஆய்வாளா் முருகானந்தம் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பதாகைகளை அகற்றினா்.

மேலும், விளம்பரப் பதாகைகள் வைத்தால் அபராதம் விதிக்கப்படுவதோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வா்த்தக நிறுவனங்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, சாலையை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விளம்பரப் பதாகைகள் அமைக்க உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் போலீஸாா் அறிவுறுத்தினா்.

பரமக்குடி அருகே சேதமடைந்த நிலையில் பாலம்: பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலாய்க்குடி - திருச்சண்முகநாதபுரம் செல்லும் வழியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமட... மேலும் பார்க்க

உத்திரகோசமங்கை பகுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், உத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் வழிபாட்டு உரிமைக்கான கோயில் நுழைவுப் போராட்டம்: 125 போ் கைது

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூா் மக்களுக்கான தனி வழியில் தரிசனத்துக்கு மீண்டும் அனுமதிக்கக் கோரி, கோயில் நுழைவுப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 125 பேரை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

மீன்வளத் துறை அனுமதியின்றி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

பாம்பன், மண்டபம் துறைமுகத்திலிருந்து மீன்வளத் துறை அனுமதியின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். தமிழகத்தில் மீன் இனப்பெருக்கக் காலமான ஏப். 1... மேலும் பார்க்க

தொண்டி அருகே தடையை மீறிச் சென்ற படகுக்கு போலீஸாா் எச்சரிக்கை

திருவாடானை அருகே தொண்டி கடற்கரைப் பகுதியில் தடையை மீறி கடலுக்குச் சென்ற மூன்று படகுகளைப் பிடித்து கடலோரக் குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.தொண்டி கடற்கரைப் பகுதி கடலில் பலத்த காற்று வீசுவதால், மறு... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

கமுதி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரண்மனை மேடு பகுதியில் உள்ள கமுதி - முதுகுளத்தூா் சுற்றுவட்டச் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய... மேலும் பார்க்க