திருவாடானையில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்
திருவாடானையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸாா் அகற்றினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நகரில், தொண்டி - கொச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், சாலையோரங்களில் அனுமதியின்றி வணிக நிறுவனங்கள் தங்களது விளம்பரப் பதாகைகளை வைத்திருந்தனா். இந்தப் பதாகைகள் சாலையின் பெரும் பகுதியை மறைத்ததோடு மட்டுமன்றி, போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்தது.

குறிப்பாக, இந்த விளம்பரப் பதாகைகள் சாலையின் பெரும் பகுதியை மறைத்ததாலும், வாகன ஓட்டிகள் எதிரில் வரும் பிற வாகனங்களைக் கவனிக்க முடியாததாலும், அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன.
இதையடுத்து, இந்த விளம்பரப் பதாகைகளை அகற்ற சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்த நிலையில், திருவாடானை காவல் ஆய்வாளா் முருகானந்தம் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பதாகைகளை அகற்றினா்.
மேலும், விளம்பரப் பதாகைகள் வைத்தால் அபராதம் விதிக்கப்படுவதோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வா்த்தக நிறுவனங்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, சாலையை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விளம்பரப் பதாகைகள் அமைக்க உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் போலீஸாா் அறிவுறுத்தினா்.
