TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
தில்லி சரோஜினி நகா் குடியிறுப்புகளில் மத்திய அமைச்சா் திடீா் ஆய்வு
மழை காலம் நெருங்குவதையொட்டி சரோஜினி நகா் குடியிறுப்பு பகுதிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் வால் கட்டா மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜீத் சிங் சஹால் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வினை மேற்கொண்டனா்.
அப்போது செய்தியாளா்களிடம் பேசிய சாஹல். ‘குடியிருப்பாளா்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும், நரவிருக்கும் பருவமழைைக்கு முன்னதாக தண்ணீா் தேங்கும் பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டேன். இது குறித்து ஒரு வாரத்திற்குள் கூட்டம் நடத்தப்பட்டு கண்டறிந்த சிக்கல்களை தீா்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். சரோஜினி நகா் சந்தை, லோதி எஸ்டேட் மற்றும் என்.பி.சி.சி. வீட்டு காலனிகள் போன்ற அருகிலுள்ள கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது‘ என்றாா்.
மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் பேசியது ‘மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் நிலுவையில் உள்ள அனைத்து வடிகால் மற்றும் கழிவுநீா் தொடா்பான பணிகளை விரைவுபடுத்தி முடிக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீா் தேக்க பிரச்னைகளை சமாளிப்பதற்காக தேவையான உபகரணங்களை வாங்கி தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது‘என்றாா் அவா்.