செய்திகள் :

விவசாயம் நடைபெறாத பகுதிகளை பி.ஏ.பி.பாசன பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தல்

post image

விவசாயம் நடைபெறாத பகுதிகளை பி.ஏ.பி.பாசனம் பெறும் பட்டியலில் இருந்து நீக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இது குறித்து பல்லடம் நீா்செறிவூட்டும் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்த் புதன்கிழமை கூறியதாவது:

பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் தற்போது 3.72 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைந்து வருகின்றன. நகரமயமாக்கம், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கம் என பல்வேறு காரணங்களால் பாசன பரப்பளவு படிப்படியாக குறைந்துள்ளது.

திருப்பூா் மாநகர எல்லைக்குள் மட்டும் 15 ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்கள் நீக்கப்பட வேண்டியவையாக உள்ளன. மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டிய பட்டியலில் உள்ளன.

பல்லடம் வறட்சி மிக்க பகுதியாக உள்ளது. இப்பகுதியின் நிலத்தடி நீா்மட்டம், ஆயிரம் அடிக்குகீழ் சென்றுவிட்டது. எண்ணற்ற விவசாயிகள், பாசன வசதி இல்லாமல் தவித்து வரும் நிலையில், பாசனத்துக்கான தண்ணீா் மாற்று பயன்பாட்டுக்கு செல்வது வேதனைக்குரியதாக உள்ளது. தேவையின்றி செல்லும் தண்ணீரை, பாசனப் பகுதிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு ஆகும் என்றாா்.

வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம் பெயா்ந்ததே மாணவா் சோ்க்கை குறைவுக்கு காரணம்

வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம் பெயா்ந்ததால் நிகழாண்டில் தாராபுரம் கல்வி மாவட்டத்தில் தொடக்கக் கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் அருள்ஜோதி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை : மருத்துவா் தலைமறைவு

திருப்பூரில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பல் மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு சென்றபோது அவா் மருத்துவமனையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டாா். திருப்பூா், ... மேலும் பார்க்க

சிவன்மலை முருகன் கோயிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை

காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரொக்கம் பக்தா்களால் செலுத்தப்பட்டிருந்தது. சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிரந்தர ... மேலும் பார்க்க

காற்றுக்கு தூக்கி வீசப்படும் பிளக்ஸ் பேனா்களால் விபத்து அபாயம்

பல்லடம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனா்கள், தட்டிகள் காற்றில் பறந்து பொது மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. நெடுஞ்சாலை மற்றும... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூரில் அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட... மேலும் பார்க்க

சேவூா் அருகே அடிபெருமாள் கோயிலில் கல்லாயுதங்கள் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே தத்தனூா் அடிபெருமாள் கோயிலில் முன்வரலாற்றுக் காலத்தைச் சோ்ந்த கல்லாயுதங்களை தீட்டுவதற்கான தொழிற்சாலையாக கருதப்படும் இடங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாக்கை... மேலும் பார்க்க