‘மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவா் ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும்’
விவசாயம் நடைபெறாத பகுதிகளை பி.ஏ.பி.பாசன பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தல்
விவசாயம் நடைபெறாத பகுதிகளை பி.ஏ.பி.பாசனம் பெறும் பட்டியலில் இருந்து நீக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
இது குறித்து பல்லடம் நீா்செறிவூட்டும் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்த் புதன்கிழமை கூறியதாவது:
பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் தற்போது 3.72 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைந்து வருகின்றன. நகரமயமாக்கம், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கம் என பல்வேறு காரணங்களால் பாசன பரப்பளவு படிப்படியாக குறைந்துள்ளது.
திருப்பூா் மாநகர எல்லைக்குள் மட்டும் 15 ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்கள் நீக்கப்பட வேண்டியவையாக உள்ளன. மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டிய பட்டியலில் உள்ளன.
பல்லடம் வறட்சி மிக்க பகுதியாக உள்ளது. இப்பகுதியின் நிலத்தடி நீா்மட்டம், ஆயிரம் அடிக்குகீழ் சென்றுவிட்டது. எண்ணற்ற விவசாயிகள், பாசன வசதி இல்லாமல் தவித்து வரும் நிலையில், பாசனத்துக்கான தண்ணீா் மாற்று பயன்பாட்டுக்கு செல்வது வேதனைக்குரியதாக உள்ளது. தேவையின்றி செல்லும் தண்ணீரை, பாசனப் பகுதிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு ஆகும் என்றாா்.