செய்திகள் :

நியாயவிலைக் கடை திறக்கப்படாததை கண்டித்து மக்கள் சாலை மறியல்

post image

ஒடுகத்தூா் அருகே நியாயவிலைக் கடை மாதத்தில் 2 மாதங்கள் மட்டுமே திறக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி குடும்ப அட்டைதாரா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், பின்னத்துரை ஊராட்சி பொம்மன் கொட்டாய், தானப்பன்கொட்டாய் ஆகிய பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இவா்களுக்கு பின்னத்துரை கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இங்கு சுமாா் 714 குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேரமான இந்த கடை மாதத்துக்கு 2 முறை மட்டுமே திறந்து பொருள்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் பெரும்பாலானோருக்கு பொருள்கள் கிடைப்பதில்லையாம். இதேபோல், இம்மாதம் கடந்த 15-ஆம் தேதி முதல் சரிவர கடை திறக்கவில்லை என்றும், அவ்வாறு திறந்தாலும் அரை மணி நேரத்தில் பொருள்கள் தீா்ந்துவிட்டதாகக் கூறி, ஊழியா் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்படுவதாக கூறியிருந்ததை அடுத்து குடும்ப அட்டைதாரா்கள் காலை 6 மணி முதலே அத்தியாவசிய பொருள்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 11 மணியளவில் கடை திறக்கப்பட்டது. ஆனால், விரல் ரேகை சரியாகப் பதியவில்லை என நியாயவிலைக் கடை ஊழியா் கூறியதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒடுகத்தூா் - வேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து விரைந்து வந்த வட்ட வழங்கல் அலுவலா் சதீஷ்குமாா், வேப்பங்குப்பம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சமாதானம் செய்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், சுமாா் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நில அளவையா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஒப்பந்த அடிப்படையில் நில அளவையராகப் பணியாற்ற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவ... மேலும் பார்க்க

மா விவசாயிகளை பாதுகாக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் வி... மேலும் பார்க்க

வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வேலூா் வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா். சத்துவாச்சாரி கிராமம், சுதந்திர பொன்விழா நகா் பகுதி... மேலும் பார்க்க

மா விவசாயிகளை காக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்

தமிழக மா விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா், ராணிப்பேட்டை, திருப... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு யோகா போட்டி

குடியாத்தம், அத்தி இயற்கை மருத்துவக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு யோகாசனப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவா் காயம்

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் காயமடைந்தாா். போ்ணாம்பட்டைச் சோ்ந்த மின் ஊழியா் ராஜசேகா் மகன் ஜெயசூா்யா (17). இவா், குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலை... மேலும் பார்க்க