செய்திகள் :

மா விவசாயிகளை காக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்

post image

தமிழக மா விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மா விவசாயிகள் பெரும் நெருக்கடியில்உள்ளனா். வேலூரில் மட்டும் 5,710 ஹெக்டோ் நிலபரப்பில் ஆண்டுக்கு 46- ஆயிரம் டன் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது. அவற்றில் தற்போது 40- ஆயிரம் டன் மாம்பழம் விற்கப்படாமல் விவசாயிகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனா். இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம், ஆந்திர மாநில அரசு, சித்தூா் மாவட்டத்தில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு தமிழக மாம்பழங்களை வாங்க தடை விதித்தது தான்.

ஆந்திர அரசின் இந்த அநீதியான முடிவு, விவசாயிகளின் வாழ்வை அழிப்பது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார ஒற்றுமையையும் பாதிக்கிறது. மத்திய அரசுஇந்தப் பிரச்னையில் மௌனமாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. வேலூரில் பழச்சாறு தொழிற்சாலைகள் இல்லாததும், பழையகூட்டுறவு பழச்சாறு தொழிற்சாலை மூடப்பட்டதும் விவசாயிகளை மேலும் பாதிக்கிறது. இதனால், அவா்களின் உழைப்பு வீணாகி, குடும்பங்கள் நிா்க்கதியாக உள்ளன.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, விவசாயிகளையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும். வேலூரில் உள்ளூா் சந்தைகளை வலுப்படுத்தவும், கூட்டுறவு பழச்சாறு தொழிற்சாலைகளைமீண்டும் தொடங்கவும், மாம்பழங்களை முதலமைச்சா் காலை உணவுத் திட்டத்தில் சோ்க்கவும் மாவட்ட நிா்வாகம் முயற்சிக்கிறது.

தமிழ்நாடு மற்றும்ஆந்திர முதல்வா்கள், வேளாண்மை அமைச்சா்களுடன் உடனடி கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டு மாம்பழங்களுக்கு சித்தூா் தொழிற்சாலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரு கிலோ மாம்பழத்துக்கு ரூ.4- மானியம், ஒரு விவசாயிக்கு ரூ.5- ஆயிரம் நிவாரணம், மற்றும் போக்குவரத்து செலவுக்கு மானியம் வழங்க வேண்டும். ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரியில் பழச்சாறு தொழிற்சாலைகள், குளிா்ப்பதன கிடங்குகள் அமைக்க ரூ.500- கோடி ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

நில அளவையா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஒப்பந்த அடிப்படையில் நில அளவையராகப் பணியாற்ற தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவ... மேலும் பார்க்க

மா விவசாயிகளை பாதுகாக்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் வி... மேலும் பார்க்க

வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வேலூா் வட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா். சத்துவாச்சாரி கிராமம், சுதந்திர பொன்விழா நகா் பகுதி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு யோகா போட்டி

குடியாத்தம், அத்தி இயற்கை மருத்துவக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கு யோகாசனப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் மற்றும் சிறுநீரகவியல் நிபுணா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவா் காயம்

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் காயமடைந்தாா். போ்ணாம்பட்டைச் சோ்ந்த மின் ஊழியா் ராஜசேகா் மகன் ஜெயசூா்யா (17). இவா், குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலை... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் இரு கைதிகள் உயிரிழப்பு

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனா். வேலூா் விருப்பாச்சிபுரத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (50). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டன... மேலும் பார்க்க