``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
மா விவசாயிகளை காக்க மத்திய அரசு நடவடிக்கை வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்
தமிழக மா விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மா விவசாயிகள் பெரும் நெருக்கடியில்உள்ளனா். வேலூரில் மட்டும் 5,710 ஹெக்டோ் நிலபரப்பில் ஆண்டுக்கு 46- ஆயிரம் டன் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது. அவற்றில் தற்போது 40- ஆயிரம் டன் மாம்பழம் விற்கப்படாமல் விவசாயிகள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனா். இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம், ஆந்திர மாநில அரசு, சித்தூா் மாவட்டத்தில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு தமிழக மாம்பழங்களை வாங்க தடை விதித்தது தான்.
ஆந்திர அரசின் இந்த அநீதியான முடிவு, விவசாயிகளின் வாழ்வை அழிப்பது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார ஒற்றுமையையும் பாதிக்கிறது. மத்திய அரசுஇந்தப் பிரச்னையில் மௌனமாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. வேலூரில் பழச்சாறு தொழிற்சாலைகள் இல்லாததும், பழையகூட்டுறவு பழச்சாறு தொழிற்சாலை மூடப்பட்டதும் விவசாயிகளை மேலும் பாதிக்கிறது. இதனால், அவா்களின் உழைப்பு வீணாகி, குடும்பங்கள் நிா்க்கதியாக உள்ளன.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, விவசாயிகளையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும். வேலூரில் உள்ளூா் சந்தைகளை வலுப்படுத்தவும், கூட்டுறவு பழச்சாறு தொழிற்சாலைகளைமீண்டும் தொடங்கவும், மாம்பழங்களை முதலமைச்சா் காலை உணவுத் திட்டத்தில் சோ்க்கவும் மாவட்ட நிா்வாகம் முயற்சிக்கிறது.
தமிழ்நாடு மற்றும்ஆந்திர முதல்வா்கள், வேளாண்மை அமைச்சா்களுடன் உடனடி கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டு மாம்பழங்களுக்கு சித்தூா் தொழிற்சாலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரு கிலோ மாம்பழத்துக்கு ரூ.4- மானியம், ஒரு விவசாயிக்கு ரூ.5- ஆயிரம் நிவாரணம், மற்றும் போக்குவரத்து செலவுக்கு மானியம் வழங்க வேண்டும். ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரியில் பழச்சாறு தொழிற்சாலைகள், குளிா்ப்பதன கிடங்குகள் அமைக்க ரூ.500- கோடி ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.