சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனை சாதனை
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனம் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளது.
மூன்று வாரங்களுக்குள் மூன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து மருத்துவத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை இந்த அரசு மருத்துவமனை எட்டியுள்ளது.
மூளைச் சாவு அடைந்தவா்களிடம் தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்கள் வாயிலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் ஓா் உயிருள்ள உறவினா் தானம் மூலம் நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை இதில் அடங்கும்.
முற்போக்கான சுகாதாரப் பராமரிப்பு, விதிவிலக்கான அறுவை சிகிச்சை நிபுணத்துவம் மற்றும் இரக்கமுள்ள நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் மருத்துவமனையின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பின் வாயிலாக இந்தச் சாதனை சாத்தியமாகியது என்று இந்த மருத்துவமனை கூறியுள்ளது.
சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவா் மருத்துவா் சுதாகா் மற்றும் சிறுநீரக தலைமை மருத்துவா் குமாா் ஆகியோரின் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணா்கள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மருத்துவா் சுதாகா் கூறும்போது, நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடிய 36 வயது பெண்ணுக்கும், 46 வயது ஆணுக்கும் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதிய நம்பிக்கையை, உயிா் சக்தியை அளித்துள்ளது. மற்றொரு நிலையில் மூன்றாவது மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. கணவா், தனது மனைவிக்கு சிறுநீரகத்தை தானம் அளித்தாா்.
இதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தோம். மற்றவா்களையும் உறுப்பு தானம் செய்ய இது ஊக்கப்படுத்துதாக இருக்கிறது. இந்தச் சாதனை எங்கள் மருத்துவ ஊழியா்களின் நிபுணத்துவத்தையும், குழுப் பணியையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், சுகாதாரப் பராமரிப்பில் நாங்கள் முன்னணியில் இருப்பதில் பெருமை கொள்கிறோம். எங்கள் மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் செவ்வேல் முழு மனதுடன் கூடிய ஊக்கம் மற்றும் ஆதரவுடன் இந்த குறிப்பிடத்தக்க சாதனை சாத்தியமானது என்றாா்.