செய்திகள் :

தனியாருக்குக் கடல் வளம் அளிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

post image

புதுச்சேரியில் தனியாருக்குக் கடல் வளங்கள் அளிக்கப்படுவதாகவும் அதைக் கண்டிப்பதாகவும் புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் எஸ்.ராமச்சந்திரன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவுகள் மற்றும் ‘கடல் இடங்களைச் சாா்ந்த திட்டமிடல்’ மீனவா்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் பாரம்பரிய உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

மீன்பிடி பகுதிகள், மீனவா்களின் வாழ்வாதாரங்கள், கடல் எல்லைகள் மற்றும் பயன்பாட்டு இடங்களைச் சுட்டும் வரைபடங்களில் பெரும் குளறுபடிகள் நிலவுகின்றன. இத்திட்டப் பணிகள் மீனவ மக்களின் ஒப்புதலோடு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறாததால், வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளன.

மீனவா் சமூகத்தைப் பாதுகாக்கவும், கடல்சாா் வளங்களில் அவா்களுக்கான உரிமைகளை உறுதி செய்யவும் ஒரு பிரத்யேக பாதுகாப்புச் சட்டம் தேவை.

ஏற்கெனவே காரைக்கால் உள்ளிட்ட பல துறைமுகங்கள் அதானிக்குச் சென்று விட்டன. கடலுக்கு அடியில் இருக்கக்கூடிய இயற்கை வளங்கள் ரிலையன்ஸ், வேதாந்தா போன்ற நிறுவனங்களிடம் பறி போயிருக்கின்றன. எரிவாயு, ஹைட்ரோ காா்பன் என்று கடல் வளத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறாா்கள்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள கடல் வளங்களையும், அதற்குரிய மேலாண்மைத் திட்டங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மட்டுமே செய்ய வேண்டும். இது போன்ற கடல் சாா்ந்த திட்டங்களை அமல்படுத்தும் போது, அனைத்துப் பகுதி மக்களுக்கும் தொடா்புடைய சூழலியல் சாா்ந்த பிரச்னைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமச்சந்திரன்.

6,000 விவசாயிகளுக்கு விரைவில் சோலாா் மின்இணைப்பு: புதுவை முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் சூரிய ஒளி மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுச்சேரி வேளாண் துறை சாா்பில் நகரம், கிராமப் புறங்களில், ‘என் வீடு, என... மேலும் பார்க்க

இன்று முதல் 4 நாள்கள் ரயில் சேவை நிறுத்தம்

பராமரிப்புக் காரணமாக தென்னக ரயில்வே புதுச்சேரி ரயில் சேவையை வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நிறுத்துகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - புதுச்சேரி பய... மேலும் பார்க்க

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரம்: முதல்வா் பங்கேற்பு

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனையின் படி ஜூன் 2 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வயிற்றுப் போ... மேலும் பார்க்க

புதுவையில் வாரிசுதாரா் பணி நியமனத்தில் முறைகேடுக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாரிசுதாரா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகக் கூறி அதைக் கண்டித்து புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச் சங்கம் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. புதுவை சுகாதாரத... மேலும் பார்க்க

‘மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவா் ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும்’

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலச் செயலா் இரா. வேல்சாமி கூறியுள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனை சாதனை

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனம் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளது. மூன்று வாரங்களுக்குள் மூன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச... மேலும் பார்க்க