செய்திகள் :

முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு - அமைச்சரை பதவியிலிருந்து தூக்கிய பாஜக முதல்வர்!

post image

கோவாவில் 2022-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களை வென்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது பா.ஜ.க. பிரமோத் சவாந்த் கோவாவின் முதல்வராக பதவியேற்றார். கோவாவில் பழங்குடிகள் நலத்துறை (Tribal Welfare) முதல்வர் பிரமோத் சவாந்த் கட்டுப்பாட்டில் உள்ளது . இதன் காரணமாக, கோவாவில் பழங்குடியினர் நலத்துறைச் செயல்பாடுகள் நேரடியாக முதல்வரால் கவனிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த, விளையாட்டு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறைம் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கோவிந்த் கவுடே, கடந்த மே 25 அன்று பழங்குடி நல இயக்குநரகம் மற்றும் ஐக்கிய பழங்குடியினர் சங்கங்களின் கூட்டணி (UTAA) ஏற்பாடு செய்த பிரேர்ணா திவாஸ் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பிரமோத் சவாந்த்
பிரமோத் சவாந்த்

நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது

அப்போது, ``முதல்வரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் பழங்குடியினர் நலத்துறைக்கு அதிக அளவு வரி செலுத்துவோரின் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைத் திறமையாக நடத்த முடியாவிட்டால், அது நிர்வாகத்தின் மீதான கட்டுப்பாடுயின்மையைக் காட்டுகிறது. என் கருத்துப்படி, நிர்வாகம் இன்று பலவீனமடைந்துள்ளது. ஒப்பந்ததாரர்களின் கோப்புகள் ஒரே அதிகாரக் கட்டடத்தின் கீழ் தந்திரமாக கையாளப்படுகின்றன.

அவர்களே ஊழல் செய்து தேவையானதை எடுத்துக்கொண்டு பின்னர் திட்டங்களை சமர்பிக்கிறார்கள். 'பழங்குடியினர் பவன்' கட்டுவது பழங்குடி சமூகத்தின் நீண்டகால கோரிக்கை. அவர்கள் இந்தத் திட்டத்திற்காக தங்கள் நிலத்தை வழங்கினர்... நான் பழங்குடியினர் நல அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் முடங்கியுள்ளது. திட்டத்தில் ஏன் முன்னேற்றம் இல்லை?" என முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் நடந்த ஊழல் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் கோவிந்த் கவுடே
அமைச்சர் கோவிந்த் கவுடே

இந்த உரை நிகழ்த்தி மூன்றாவது வாரம் கோவிந்த் கவுடே கலை மற்றும் கலாச்சார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றும் முதல்வரின் உத்தரவுக்கு கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை உடனே ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய கோவா பா.ஜ.க தலைவர் தாமு நாயக், ``இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. அரசாங்கம், கட்சி மற்றும் கட்சியின் மத்தியத் தலைமையின் ஆலோசனைக்குப் பிறகு இது எடுக்கப்பட்டது. கட்சி ஒழுக்கம் அவசியம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சகோதரியிடமே மோசடி; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகன் - பின்னணி என்ன?!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜா. இவர், தூத்துக்குடி மில்லர்புரத்தை முகவரியாக கொண்டுள்ள நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட சொத... மேலும் பார்க்க

'மிட்நைட் விசாரணை, மாட்டிவிட்ட மகேஸ்வரி, திகிலில் பூவை ஜெகன்மூர்த்தி' - ஜெயராம் | Elangovan Explains

சிறுவன் கடத்தல் விவகாரம், இதில் ஏடிஜிபி ஜெயராம் எப்படி சம்மந்தப்பட்டார், யாரந்த மகேஸ்வரி, காதல் திருமணம் செய்த பெண்ணின் அப்பா வனராஜா பின்னணி. முக்கியமாக மகேஸ்வரி மூலமாக ஜெயராம் தொடர்பு எடுத்து அவர் மூ... மேலும் பார்க்க

G7 மாநாடு: பாதியில் கிளம்பிய TRUMP - போனில் பேசிய MODI | Israel - Iran War|Imperfect Show 18.6.2025

* Iron Dome-ஐ தாண்டி இஸ்ரேலை தாக்கும் ஏவுகணையை இரான் உருவாக்கியது எப்படி? * 'UNCONDITIONAL’ SURRENDER' - ட்ரம்ப் பதிவுக்கு பின்னால்? * G7 மாநாடு: பாதியில் நாடு திரும்பிய ட்ரம்ப்? * இஸ்ரேலுடன் இணைந்து ... மேலும் பார்க்க

Vijay-யுடன் ADMK கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? | K.T.Rajendra Balaji Exclusive Interview | TVK

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும், அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வேண்டுதலோடு திடீர் தியானத்தில் ஈடுபட்டு அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந... மேலும் பார்க்க