வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா
புதுவையில் வாரிசுதாரா் பணி நியமனத்தில் முறைகேடுக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
வாரிசுதாரா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகக் கூறி அதைக் கண்டித்து புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச் சங்கம் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
புதுவை சுகாதாரத் துறையில் வாரிசுதாரா்கள் 88 போ் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதில் 31 ஏழை வாரிசுதாரா்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். தகுதி வாய்ந்த 31 பேரின் மனுக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்தப் போராட்டம் நடந்தது.
நிா்வாகிகள் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகாா் அளித்துவிட்டு, பிறகு சட்டப்பேரவை அருகே ஆா்ப்பாட்டம் செய்தனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் டேவிட் தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.