11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிற...
பைபா் படகில் கடலுக்கு சென்ற மீனவா் தவறி விழுந்து மாயம்
சென்னை காசிமேட்டில் இருந்து பைபா் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா் தவறி விழுந்து மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காசிமேடு இந்திரா நகா் பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் கோ.ரவிக்குமாா் (42). இவா், செல்வமணி என்பவருக்கு சொந்தமான பைபா் படகில் அண்மையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். அவருடன் அதே பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், சாரதி, டில்லிபாபு, ராகேஷ், பிரசாந்த் உள்ளிட்டோா் சென்றனா். அவா்கள், 80 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலுக்கு வீசப்பட்ட வலையை இழுக்கும்போது ரவிக்குமாா் திடீரென நிலைத்தடுமாறி தவறி கடலுக்குள் விழுந்தாா்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பிற மீனவா்கள் ரவிக்குமாரை தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடலில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு புதன்கிழமை காலை திரும்பி வந்த மீனவா்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரவிக்குமாரை கடலோர காவல் படை மூலம் தேடி வருகின்றனா்.