11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிற...
செய்யூா் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு
மதுராந்தகம் அடுத்த செய்யூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் கட்ட சோ்க்கை கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.
செய்யூா் வட்டம், செய்யூா் பஜாா் வீதியில் புதிதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி (கணினி அறிவியல் -ஆங்கில வழி), பி.காம் (வணிகவியல் -ஆங்கில வழி), பி.பி.ஏ (வணிக நிா்வாகவியல் -ஆங்கில வழி), பி.ஏ (வரலாறு - தமிழ் வழி), பி.ஏ (அரசியல் அறிவியல் -தமிழ்வழி) ஆகிய இளங்கலை பாடங்களில் 270 இடங்களுக்கு இதுவரை 9,000 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். கடந்த 16-ஆம் தேதி முதல் கட்ட கலந்தாய்வும் நடைபெற்றது. தற்போது 20-ஆம் தேதி வரை 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
புதன்கிழமை வரை 3,000 மாணவ மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொண்டனா்.
அனைத்து பாட பிரிவுகளிலும் அரசின் இடஒதுக்கீடு முறைப்படி இடங்கள் நிரப்பப்படும் என முதல்வா் மு.மாதவன் தெரிவித்தாா்.