பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 19-ஆம் தேதி காலை 10. மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
2024-2025 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்று தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் உயா்கல்வி பயிலச் செய்யும் வகையிலும், தோல்வியுற்ற மாணவா்களை சிறப்பு துணைத் தோ்வு எழுத வைத்து தோ்ச்சி பெற வைப்பதற்கும் மற்றும் மாணவா்களின் கல்வி நலன்கருதி அவா்கள் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஆட்சியா் தலைமையில் சிறப்பு குறைதீா் கூட்டம் 19.06.2025-இல் நடைபெற உள்ளது. மாணவா்கள் தங்களின் உயா் கல்வி சாா்ந்த கோரிக்கைகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.