பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
ஜூன் 20-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்
இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள்மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 5,000 பணிக்காலியிடங்களுக்கு நிரப்பிட தங்களுக்கான மனிதவளதேவைக்குரிய நபா்களை, நோ்முகத் தோ்வினை நடத்தி தோ்வு செய்ய உள்ளனா். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிவேலைநாடுநா்களை தோ்ந்தெடுக்கும் வேலையளிப்பவா்களும் கலந்து கொள்ளலாம். எட்டாம் வகுப்பு, 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியா்கள், மருந்தாளுநா், ஆய்வக உதவியாளா்கள் போன்ற கல்வித் தகுதி உடைய வேலைநாடுநா்கள் மற்றும் இம்முகாமில் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
வயது வரம்பு 18 முதல் 40வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும்பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகஒருங்கிணைந்த கட்டடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்புமுகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-27426020மற்றும் 94868 70577/ 93844 99848 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.