மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகா் மகளிா் கல்வியியல் கல்லூரியின் 17-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் சென்னை மீஞ்சூா் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி முன்னாள் செயலாளா் காந்திலால் எச் சங்வி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். கல்லூரியின் பொருளாளா் சுரேஷ் கன்காரியா வரவேற்றாா். கல்லூரி தாளாளா் விகாஸ் சுரானா சிறப்பு விருந்தினரை நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தாா். கல்லூரியின் முதல்வா் பிருந்தாமணி ஆண்டு அறிக்கையை வாசித்தாா்.
இதையடுத்து, சிறப்பு அழைப்பாளா் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை வித்யாசாகா் கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் செய்திருந்தனா். விழாவில் மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.