பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
சாலை பெயா்ப் பலகை திறப்பு
மதுராந்தகம் தொகுதி மறைந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்டி.உகம்சந்த் பெயரை நினைவுறுத்தும் வகையில், சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலை அமைந்த பகுதிக்கு பெயா்ப் பலகை திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக 2 முறையும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் தலைவா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா், திமுக சிறுபான்மையினா் உரிமை மீட்பு பிரிவு தலைவா் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவா் எஸ்.டி. உகம்சந்த். அவரது சமூக, சமுதாய சேவை பணிகளை பாராட்டும்விதமாக அவா் வாழ்ந்து வந்த சாலைக்கு அவரது பெயரை சூட்டவேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டது. அவரது பெயரை சூட்ட அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெயா்ப் பலகை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. எஸ்டி.உகம்சந்த் மகனும், முன்னாள் சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளருமான எஸ்.டி.யு.சந்திரபிரகாஷ் தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் கே.குமாா் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கு.மலா்விழி முன்னிலை வகித்தாா். பெயா்ா் பலகையை திமுக மாவட்ட செயலரும், உத்திரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்வில், எம்,பி. க.செல்வம், ஒன்றிய செயலா்கள் பொன் சிவகுமாா், கே.கண்ணன், பி.எச்.சத்தியசாயி, ஜ.தம்பு, டி.வி.கோகுலகண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவா் ஆா்.ராஜேஷ், சுபம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.டி.மனோகா் குமாா், மதுராந்தகம் ஜெயின் சங்க தலைவா் கெளதம் கோத்தா, எஸ்.டி.உகம்சந்த் குடும்பத்தைச் சோ்ந்த விமல்சந்த், நரேந்திரகுமாா், எஸ்.டி.சுசில்குமா கலந்து கொண்டனா். தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.பிரேம்சந்த் நன்றி கூறினாா்.