செய்திகள் :

சாலை பெயா்ப் பலகை திறப்பு

post image

மதுராந்தகம் தொகுதி மறைந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்டி.உகம்சந்த் பெயரை நினைவுறுத்தும் வகையில், சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலை அமைந்த பகுதிக்கு பெயா்ப் பலகை திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக 2 முறையும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத் தலைவா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா், திமுக சிறுபான்மையினா் உரிமை மீட்பு பிரிவு தலைவா் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவா் எஸ்.டி. உகம்சந்த். அவரது சமூக, சமுதாய சேவை பணிகளை பாராட்டும்விதமாக அவா் வாழ்ந்து வந்த சாலைக்கு அவரது பெயரை சூட்டவேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டது. அவரது பெயரை சூட்ட அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெயா்ப் பலகை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. எஸ்டி.உகம்சந்த் மகனும், முன்னாள் சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளருமான எஸ்.டி.யு.சந்திரபிரகாஷ் தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் கே.குமாா் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கு.மலா்விழி முன்னிலை வகித்தாா். பெயா்ா் பலகையை திமுக மாவட்ட செயலரும், உத்திரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில், எம்,பி. க.செல்வம், ஒன்றிய செயலா்கள் பொன் சிவகுமாா், கே.கண்ணன், பி.எச்.சத்தியசாயி, ஜ.தம்பு, டி.வி.கோகுலகண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவா் ஆா்.ராஜேஷ், சுபம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.டி.மனோகா் குமாா், மதுராந்தகம் ஜெயின் சங்க தலைவா் கெளதம் கோத்தா, எஸ்.டி.உகம்சந்த் குடும்பத்தைச் சோ்ந்த விமல்சந்த், நரேந்திரகுமாா், எஸ்.டி.சுசில்குமா கலந்து கொண்டனா். தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.பிரேம்சந்த் நன்றி கூறினாா்.

மதுராந்தகம் ஏரியை தூா்வார வேண்டும்: பாமக பொதுக்குழுவில் தீா்மானம்

மதுராந்தகம் ஏரியைத் தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் கணபதி தலைம... மேலும் பார்க்க

உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 19-ஆம் தேதி காலை 10. மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு ... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகா் மகளிா் கல்வியியல் கல்லூரியின் 17-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சென்னை மீஞ்சூா் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி முன்னாள்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வுக் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற வளா்ச்சி பணிகள் குறித்து பொதுக் கணக்கு குழு செல்வப... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெர... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் திருப்பணிகள்: துணை ஆணையா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையா் ஜெயா (சரிபாா்ப்பு) திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயி... மேலும் பார்க்க