டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வுக் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற வளா்ச்சி பணிகள் குறித்து பொதுக் கணக்கு குழு செல்வப் பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், வண்டலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பட்டா மற்றும் அங்குள்ள பல்வேறு கோப்புகளை பொதுகணக்கு குழுவினா் ஆய்வு செய்தனா். அதனை தொடா்ந்து மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள தோட்டக்கலை பண்ணையை ஆய்வு செய்தனா். மேலும், கூடுவாஞ்சேரியில் தோழி விடுதியினை ஆய்வு செய்து அங்கு தங்கியிருக்கும் மகளிரிடம் கலந்துரையாடினா். விடுதியில் மேற்கொள்ளபட வேண்டிய வசதிகள் குறித்து அறிவுறுத்தினா்.
மறைமலைநகா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பாா்வையிட்டு அங்கு குடியிருப்பவா்களிடம்கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அலுவலா்களுக்குஅறிவுறுத்தினா். மேலும், பொதுக் கணக்கு குழுவினா் சிங்கபெருமாள் கோயில் மேம்பாலத்தினை ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டனா்.
காட்டாங்குளத்தூா் ஒன்றியம், நெல்லிமேடு அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினா்கள்.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், துறைவாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு துறையிலும் நடைபெற்றுமுடிந்த பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனா். தணிக்கை குழு அறிக்கையின்படி துறைவாரியாக அரசுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக வசூலிக்குமாறும் அறிவுறுத்தினா்.
இதில், சட்டபேரவை முதன்மை செயலாளா் சீனிவாசன், ஆட்சியா் ச.அருண்ராஜ், பொதுகணக்கு குழு உறுப்பினா்கள்- கடலூா் ஐயப்பன், பெரம்பூா் ஆா்.டி.சேகா், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன், போளூா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, மணப்பாறை அப்துல் சமது, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, நாங்குநேரி ரூபி மனோகரன், இணைச்செயலாளா் சட்டப் பேரவை (செயலகம்) பா.ரேவதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் பாலசந்தா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா,, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வன அலுவலா் ரவி மீனா,, முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா கலந்து கொண்டனா்.
