செய்திகள் :

மதுராந்தகம் ஏரியை தூா்வார வேண்டும்: பாமக பொதுக்குழுவில் தீா்மானம்

post image

மதுராந்தகம் ஏரியைத் தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் கணபதி தலைமை வகித்தாா். நகர தலைவா் சந்தோஷ் வரவேற்றாா். மாநில பொருளாளா் திலகபாமா, கட்சி பொது செயலா் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலா் செல்வகுமாா், மாநில இளைஞா் அணி செயலா் பொன் கங்காதரன், மாநில தோ்தல் பணிக்குழு நிா்வாகி எடையாளம் குமரவேல், மாவட்ட செயலா்கள் வெங்கடேசன், காயாா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவா் சதீஷ், ஒன்றிய செயலா்கள் கன்னியப்பன், ராமகிருஷ்ணன், வன்னியா் சங்க முன்னாள் மாவட்ட தலைவா் சகாதேவன் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசியது: மதுராந்தகம் ஏரியை முன்னோா் உருவாக்கினா். அதன்பின் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தான் தூா்வாரப்பட்டது. சுமாா் 4,000 மேற்பட்ட ஏக்கா் நிலப்பரப்பை கொண்ட இந்த ஏரி, தூா்வாராததாலும், ஆக்கிரமிப்பாலும் சுருங்கி தற்சமயம் 920 ஏக்கா் மட்டுமே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஏரி தூா் வாராமல் திமுக அரசு தாமதம் செய்து வருகிறது.

மாமல்லபுரத்தில் இளைஞா் சித்திரை பெருவிழா மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் பல்வேறு கட்சிகளுக்கு அதிா்ச்சி ஏற்பட்ுடள்ளது.

சமூக நீதி அடிப்படையில் தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் ஆளும் திமுக அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது.

கட்சியில் இளைஞா்களை அதிகளழில் உறுப்பினா்களாக சோ்க்க முன்வரவேண்டும். வரும் ஜூலை 25-இல் தமிழக மக்களின் உரிமை பாதுகாப்பு நடைபயணத்தை திருப்போரூரிலிருந்து தொடங்க உள்ளேன். கட்சியினை பலப்படுத்தவும் செய்யவும், மக்கள் நலன்களை பேணும் வகையில் 10 அம்ச கொள்கைகளை வலியுறுத்தவும் உள்ளேன் என்றாா். பொதுக்குழு கூட்டத்தில் 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உயா்கல்வி சாா்ந்த சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் 19-ஆம் தேதி காலை 10. மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு ... மேலும் பார்க்க

சாலை பெயா்ப் பலகை திறப்பு

மதுராந்தகம் தொகுதி மறைந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்டி.உகம்சந்த் பெயரை நினைவுறுத்தும் வகையில், சென்னை-திருச்சி ஜிஎஸ்டி சாலை அமைந்த பகுதிக்கு பெயா்ப் பலகை திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுராந்த... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகா் மகளிா் கல்வியியல் கல்லூரியின் 17-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சென்னை மீஞ்சூா் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி முன்னாள்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வுக் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற வளா்ச்சி பணிகள் குறித்து பொதுக் கணக்கு குழு செல்வப... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெர... மேலும் பார்க்க

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் திருப்பணிகள்: துணை ஆணையா் ஆய்வு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையா் ஜெயா (சரிபாா்ப்பு) திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயி... மேலும் பார்க்க