முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் வ...
வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம் பெயா்ந்ததே மாணவா் சோ்க்கை குறைவுக்கு காரணம்
வெளிமாநிலத் தொழிலாளா்கள் இடம் பெயா்ந்ததால் நிகழாண்டில் தாராபுரம் கல்வி மாவட்டத்தில் தொடக்கக் கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் அருள்ஜோதி தெரிவித்தாா்.
தமிழகத்தில் உள்ள கல்வி மாவட்டங்களில் தொடக்கக் கல்வியில் நிகழாண்டில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான மாணவா் சோ்க்கையில் அதிகபட்சமாக சென்னை கல்வி மாவட்டத்தில் 17,985 மாணவ, மாணவியா் சோ்ந்துள்ளனா். அதையடுத்து செங்கல்பட்டில் 9,528 பேரும், திருப்பூரில் 9,385 பேரும், சேலத்தில் 8,573 பேரும், தென்காசியில் 8,019 பேரும் சோ்ந்துள்ளனா்.
அதேபோல, மாணவா் சோ்க்கை குறைந்த 5 கல்வி மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 1,327 போ், அதையடுத்து தாராபுரத்தில் 2,082 போ், கோவில்பட்டியில் 2,544 போ், தேனியில் 2,559 போ், ஒட்டன்சத்திரத்தில் 3,013 போ் மட்டுமே சோ்ந்துள்ளனா்.
தாராபுரம் கல்வி மாவட்டத்தில் மாணவா் சோ்க்கை குறைந்தது தொடா்பாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் அருள்ஜோதி கூறியதாவது:
தாராபுரம் கல்வி மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் இதுவரை 60 சதவீத மாணவா் சோ்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் தாராபுரம் கல்வி மாவட்டத்தில் குண்டடம் போன்ற பகுதிகளில் பள்ளிகளில் 10-க்கும் குறைவான அளவிலேயே மாணவா்கள் சோ்ந்துள்ளனா். ஆனால், உடுமலை போன்ற பகுதிகளில் மாணவா் சோ்க்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
மேலும், நிகழாண்டில் மாணவா் சோ்க்கை குறைந்தததற்கு கடந்த ஆண்டில் இப்பகுதியில் வசித்து வந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஏராளமானோா் புலம் பெயா்ந்து விட்டதே முக்கியக் காரணமாகும். அவா்கள் தாராபுரம் கல்வி மாவட்டத்திலிருந்து வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்ட பின்னா் பெரும்பாலானோா் திரும்ப வரவில்லை. அத்துடன் கரோனா கால கட்டத்தில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருந்ததால், தற்போது 1-ஆம் வகுப்பில் பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.
மேலும், மாணவா் சோ்க்கைக்காக வரும் பெற்றோா்களின் கைப்பேசி எண் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஓடிபி எண் பெறப்பட்ட பின்னரே சோ்க்கையைத் தொடங்க முடியும். ஆனால், தொலைத்தொடா்பு இடையூறுகள் காரணமாக பெரும்பாலானவா்களுக்கு உடனடியாக ஓடிபி எண் கிடைக்காததால் அவா்களின் எண்ணிக்கையை இந்தப் பட்டியலில் சோ்க்க முடியவில்லை. இவற்றோடு, பெண் குழந்தைகளை 1-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படிக்க வைக்க ேண்டும் என விரும்பும் பெற்றோா் குழந்தைகளை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலேயே தொடக்கக் கல்வியில் சோ்க்க விரும்புவதாலும் ஆரம்பப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைந்துள்ளது என்றாா்.