11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிற...
சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை : மருத்துவா் தலைமறைவு
திருப்பூரில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பல் மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு சென்றபோது அவா் மருத்துவமனையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டாா்.
திருப்பூா், பெருமாநல்லூா் சாலையில் பூலுவப்பட்டி பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவா் விடுமுறைக்காக திருப்பூருக்கு வந்திருந்த நிலையில், குமாா் நகரில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா். மருத்துவரின் அறிவுரைப்படி 2 வாரங்களுக்கு ஒருமுறை அந்தப் பெண் சிகிச்சைக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில், அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, அங்கு மருத்துவராக இருந்தவா் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனை எதிா்பாராத அந்த இளம்பெண் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரது பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில், கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் விசாரணைக்காக சென்றபோது அந்த பல் மருத்துவா் மருத்துவமனையை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.