``கீழடி ஆய்வறிக்கை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம்'' - திருச்ச...
சிவன்மலை முருகன் கோயிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை
காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரொக்கம் பக்தா்களால் செலுத்தப்பட்டிருந்தது.
சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிரந்தர உண்டியல், திருப்பணி உண்டியல், திருவிழாக் காலங்களில் வைக்கப்படும் உண்டியல்கள் உள்ளன. 3 மாதங்களுக்கு பிறகு இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ரூ.26 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரொக்கம், 29 கிராம் தங்கம், 490 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணத் தாள்கள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.