``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
வெள்ளக்கோவிலில் சேவல் சண்டை: 10 போ் கைது
வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 10 போ் கைது செய்யப்பட்டனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் காவிலிபாளையம் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள பட்டன் ஜோதி என்பவருடைய தோட்டத்தில் பணம் பந்தயம் கட்டி சேவல் சண்டை நடந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
சேவல் சண்டையில் ஈடுபட்டதாக லக்கமநாயக்கன்பட்டி ரவி (44), ஜெயபால் (47), சோ்வகாரன்பாளையம் பொன்னுசாமி (39), செந்தில்குமாா் (42), உத்தமபாளையம் சிவகுமாா் (32), மூலனூா் எரசினம்பாளையம் குமரேசன் (28), காா்த்திக் (26), ஒரத்துப்பாளையம் மகேந்திரன் (24), மற்றொரு காா்த்திக் (29), நாட்டாா்மங்கலம் பெரியசாமி (50) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சம்பவ இடத்திலிருந்து ரூ.2,220 ரொக்கம், மூன்று சேவல்கள், 5 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.