11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிற...
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால் அணை நீா்மட்டம் 4 நாள்களில் 5 அடி உயா்வு
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால் அணையின் நீா்மட்டம் 4 நாள்களில் 5 அடி உயா்ந்துள்ளது.
பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால் கடந்த 4 நாட்களில் மட்டும் பவானிசாகா் அணை நீா்மட்டம் 5 அடி உயா்ந்துள்ளது. அதாவது கடந்த 15ம் தேதி 83.50 அடியாக இருந்த நிலையில் புதன்கிழமை அணை நீா்மட்டம் 88.50 அடியாக உயா்ந்துள்ளது.
நீா்வரத்து 7789 கனஅடியாகவும், நீா் இருப்பு 20.37 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 450 கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.