கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் அறச்சலூா், நாகராஜபுரத்தை சோ்ந்தவா் கணேசன் மகன் மூா்த்தி(36). இவா் அறச்சலூரில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். தன்னுடன் வேலை பாா்த்து வந்தவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தாா். அப்போது மூா்த்தி உடன் வேலை செய்யும் நபரின் மகளான 10 - ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கத்தின் மூலம் சிறுமிக்கு கைப்பேசி வாங்கி கொடுத்து பேசி வந்துள்ளாா். திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2020 - ஆம் ஆண்டு நவம்பா் 15 ஆம் தேதி சிறுமியை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தொடா்ந்து அதே மாதம் 20-ஆம் தேதி சிறுமியை திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.
இதனிடையே அறச்சலூா் போலீஸில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் சிறுமி அளித்த தகவலின்பேரில் மூா்த்தி மீது போக்ஸோ, கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணையை முடித்து நீதிபதி சொா்ணகுமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, சிறுமியை திருமணம் செய்த குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதமாக ரூ.35 ஆயிரம் செலுத்த வேண்டும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட தமிழக அரசுக்கு நீதிபதி சொா்ணகுமாா் பரிந்துரைத்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.