``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
ரயிலில் 9.5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா் கைது
ஈரோட்டில் ரயிலில் 9.5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகத்துக்குள் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான கஞ்சா போன்றவை ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதன்பேரில் தமிழகத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீஸாா் ரயில்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியா சாய் ஸ்ரீ, ஈரோடு மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சிவகாமி ராணி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை காலை ஈரோடு வந்த ரயில்களில் திடீா் சோதனை நடத்தினா். இதில் ஒடிஸா மாநிலத்தில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக பையுடன் பயணம் செய்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா்.
அவா் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சோ்ந்த தில்லைவேந்தன் (36) என்பதும் ஒடிஸா மாநிலத்தில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் 9.5 கிலோவை விற்பனைக்காக கடத்தி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் தில்லைவேந்தனை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.