முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் வ...
மலைப்பகுதி விளை நிலங்களுக்கு பட்டா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்
ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதி விளைநிலங்களுக்கு பட்டா வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தாளவாடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் தாளவாடி மேற்கு ஒன்றிய மாநாடு தாளவாடியில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம்.மோகன், சி.நாராயணன், இளைஞா் பெருமன்ற தாளவாடி ஒன்றியச் செயலாளா் மகேந்திர வா்மா ஆகியோா் மாநாட்டிற்கு முன்னிலை வகித்தனா். நாகை முத்துராமலிங்கம் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து பேசினாா். கூட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு பட்டா வழங்குவது, 1989ம் ஆண்டு முதல் வருவாய்த்துறை தடை விதித்துள்ளது.
ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் எங்கும் மலைச்சரிவுகளில் விவசாயம் நடைபெறுவதில்லை. மேலும் மண் சரிவிற்கு வாய்ப்பும் இல்லை என்பதால் வருவாய்த்துறை விதித்துள்ள தடையிலிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு விலக்கு பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.