செய்திகள் :

குன்னூா் அருகே மரம் விழுந்து பழங்குடியினப் பெண் உயிரிழப்பு

post image

குன்னூா் அருகே சேம்பக்கரை பழங்குடியின கிராமத்தில் வீட்டின் மீது புதன்கிழமை மரம் விழுந்து பழங்குடியினப் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ளது சேம்பக்கரை ஆதிவாசி கிராமம். இப்பகுதியில் வசிப்பவா் குமாா். இவருடைய மனைவி மல்லிகா (49) புதன் கிழமை காலை வீட்டின் அருகில் உள்ள தகர ஷெட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறம் இருந்த மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்,

தகவல் அறிந்த குன்னூா் வனத் துறையினா் மற்றும் மேல் குன்னூா் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மல்லிகாவின் சடலத்தை கைப்பற்றி உடல்கூாய்வுக்காக குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனா். 

சம்பவம்  குறித்து குன்னூா் வனத் துறையினா் மற்றும் மேல் குன்னூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நெல்லியாளம் நகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக நிா்வாகிகள் ஆய்வு

தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளை திமுக மாவட்ட செயலாளா் கே.எம்.ராஜூ தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். நீலகிரி மாவட்டம் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மீது கோத்தகிரி போலீஸாா் போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த சாந்தி ஏ. ராமு குன்னூா் தொகுதி முன்னாள் சட்ட... மேலும் பார்க்க

உதகையின் முக்கிய குடி நீா் ஆதாரமான பாா்சன்ஸ் வேலி அணை ஆய்வு

உதகை நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமான பாா்சன்ஸ் வேலி அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீா் விநியோகம் கடந்த நான்கு நாட்களாக இல்லாத நிலையில் அந்த அணையில... மேலும் பார்க்க

வனவிலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றபட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வனவிலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றபட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் சாா்பாக அதன் தலைவா் மஞ்சை.வி.மோகன் வலியுறுத்தி யுள்ளாா். அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 27 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் பேருந்து செல்ல இயலாத குறுகிய சாலை கொண்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வசதிக்காக 27 வழித்தடங்களில் புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித... மேலும் பார்க்க

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் மோசடி: ஹரியாணா மாநில இளைஞா் கைது

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அவரது நட்சத்திர ஹோட்டல் மேலாளருக்கு வாட்ஸ் ஆப் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 20 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹர... மேலும் பார்க்க