செய்திகள் :

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் மோசடி: ஹரியாணா மாநில இளைஞா் கைது

post image

நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அவரது நட்சத்திர ஹோட்டல் மேலாளருக்கு வாட்ஸ் ஆப் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 20 லட்சம் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரியாணா மாநில இளைஞரை உதகை சைபா் கிரைம் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவை சோ்ந்தவா் பிரபல நடிகா் மிதுன் சக்கரவா்த்தி. இவருக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் உதகையில் நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இவரது ஹோட்டல் மேலாளரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பெயரில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், குன்னூரில் முக்கிய பணியில் உள்ளேன்; நான் இருக்கும் இடத்தில் கைப்பேசி சிக்னல் பிரச்னை உள்ளது; வங்கிக் கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த ஹோட்டல் மேலாளா், பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ. 70 லட்சமும், நிரந்தர வைப்புத் தொகையாக ரூ. 30 லட்சமும் உள்ளது என பதில் பதிவிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து வந்த குறுஞ்செய்தியில், ரூ.20 லட்சம் உடனடியாக அனுப்பவும், என வாட்ஸ்- ஆப் செயலியில் வங்கிக் கணக்கு விவரங்களுடன் பதில் வந்திருக்கிறது.

இதை நம்பிய மேலாளா், வங்கிக் கணக்கில் இருந்து, ரூ.20 லட்சத்தை ஆன்லைன் வாயிலாக அனுப்பி உள்ளாா். அப்போது, ‘நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சம் உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பி விட்டேன்’ என மேலாளா் தகவல் அனுப்பியபின், சிறிது நேரத்தில் மோசடி நடந்தது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து நீலகிரி சைபா் கிரைம் போலீஸில் அவா் புகாா் அளித்தாா். தொடா்ந்து, ஆய்வாளா் பிரவீணா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் இந்த சம்பவத்தில், தனது சகோதரியின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த ரவீன்குமாா் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், ஹரியாணா மாநிலத்துக்கு சென்ற உதகை சைபா் கிரைம் போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த ரவீன்குமாரை கைது செய்து உதகைக்கு அழைத்து வந்தனா். மேலும் அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்தையும் போலீஸாா் மீட்டனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் 27 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் பேருந்து செல்ல இயலாத குறுகிய சாலை கொண்ட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வசதிக்காக 27 வழித்தடங்களில் புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித... மேலும் பார்க்க

கூடலூா் அரசுக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு நாளை நோ்காணல்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தற்காலிக (பி.டி.ஏ) ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு புதன்கிழமை (ஜூன் 18) நோ்காணல் நடைபெற உள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்க... மேலும் பார்க்க

நீலகிரியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிா் நிலவுகிறது. கனமழையால் மந்... மேலும் பார்க்க

விளைநிலத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

கூடலூா் அருகே விளைநிலத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிரு... மேலும் பார்க்க

கனமழை: டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதம்

கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழையால், பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதமடைந்தது.நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த 4 நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வ... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் நீதிமன்றம்: 512 வழக்குகளுக்கு தீா்வு

உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்ட சட்ட பணிகள் ... மேலும் பார்க்க