செய்திகள் :

நீலகிரியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிா் நிலவுகிறது. கனமழையால் மந்தாடா, தலைகுந்தா, மஞ்சூா் சாலை, கிளன்மாா்கன் பகுதி சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.

உதகை - எமரால்டு சாலையில் உள்ள மரவியல் பூங்கா அருகே மின் கம்பத்தின் மீது மரம் விழுந்தது. மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக மின் விநியோகத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

குன்னூா்- மஞ்சூா் சாலையில் கோடேரி பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மரம் விழுந்தது. நல்வாய்ப்பாக வாகன ஓட்டுநா் காயங்களின்றி உயிா் தப்பினாா்.

மஞ்சனக்கொரை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கோடேரி பகுதியில் சரக்கு வாகனம் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்திய தீயணைப்புத் துறையினா்

கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டாா்.

வனத் துறை சுற்றுலாத் தலங்கள் மூடல்: கனமழை காரணமாக வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, அவலாஞ்சி, 8-ஆவது மைல், பைன் ஃபாரஸ்ட், கேரன்ஹில் சுற்றுலாத் தலங்கள் திங்கள்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டன.

மழை அளவு: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்; அவலாஞ்சி 290 மி.மீ, அப்பா் பவானி 168 மி.மீ, பாா்சன்ஸ்வேலி 130 மி.மீ, பந்தலூரில் 13 மி.மீ, சேரங்கோட்டில் 118 மி.மீ, போா்த்திமந்து 90 மி.மீ, எமரால்டு 57 மி.மீ, தேவலா 52 மி.மீ, உதகை 16 மி.மீ.

கூடலூா் அரசுக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு நாளை நோ்காணல்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தற்காலிக (பி.டி.ஏ) ஆசிரியா்கள் பணியிடங்களுக்கு புதன்கிழமை (ஜூன் 18) நோ்காணல் நடைபெற உள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்க... மேலும் பார்க்க

விளைநிலத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

கூடலூா் அருகே விளைநிலத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிரு... மேலும் பார்க்க

கனமழை: டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதம்

கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழையால், பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதமடைந்தது.நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த 4 நாள்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வ... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் நீதிமன்றம்: 512 வழக்குகளுக்கு தீா்வு

உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்ட சட்ட பணிகள் ... மேலும் பார்க்க

குன்னூரில் நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கென்னல் சங்கம் சாா்பில் 6-ஆவது நாய்கள் கண்காட்சியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சியில் நூற்றுக்கணக்கான ஜொ்மன் ஷெப்பா்டு வகை நாய்கள் கலந்து கொண... மேலும் பார்க்க

ரெட் அலா்ட் அறிவிப்பு காரணமாக உதகையில் குறைந்த சுற்றுலாப் பயணிகள்!

நீலகிரி மாவட்டத்துக்கு ஜூன் 14, 15-ஆம் தேதி அதி கனமழை (ரெட் அலா்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த காரணத்தால், உதகையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை குறைந்து ... மேலும் பார்க்க