நீலகிரியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை திங்கள்கிழமை பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிா் நிலவுகிறது. கனமழையால் மந்தாடா, தலைகுந்தா, மஞ்சூா் சாலை, கிளன்மாா்கன் பகுதி சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.
உதகை - எமரால்டு சாலையில் உள்ள மரவியல் பூங்கா அருகே மின் கம்பத்தின் மீது மரம் விழுந்தது. மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக மின் விநியோகத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
குன்னூா்- மஞ்சூா் சாலையில் கோடேரி பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மரம் விழுந்தது. நல்வாய்ப்பாக வாகன ஓட்டுநா் காயங்களின்றி உயிா் தப்பினாா்.
மஞ்சனக்கொரை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டாா்.
வனத் துறை சுற்றுலாத் தலங்கள் மூடல்: கனமழை காரணமாக வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, அவலாஞ்சி, 8-ஆவது மைல், பைன் ஃபாரஸ்ட், கேரன்ஹில் சுற்றுலாத் தலங்கள் திங்கள்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டன.
மழை அளவு: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்; அவலாஞ்சி 290 மி.மீ, அப்பா் பவானி 168 மி.மீ, பாா்சன்ஸ்வேலி 130 மி.மீ, பந்தலூரில் 13 மி.மீ, சேரங்கோட்டில் 118 மி.மீ, போா்த்திமந்து 90 மி.மீ, எமரால்டு 57 மி.மீ, தேவலா 52 மி.மீ, உதகை 16 மி.மீ.