உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
குன்னூரில் நாய்கள் கண்காட்சி தொடக்கம்!
குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கென்னல் சங்கம் சாா்பில் 6-ஆவது நாய்கள் கண்காட்சியில் சனிக்கிழமை தொடங்கியது.
இந்த கண்காட்சியில் நூற்றுக்கணக்கான ஜொ்மன் ஷெப்பா்டு வகை நாய்கள் கலந்து கொண்டன. மோப்பத்திறன், கீழ்படிதல், பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் நாய்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன.
இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கண்காட்சியில், உள்நாட்டு வகையான ராஜபாளையம், கோம்பை, காரவன்ஹவுண்ட், ராம்பூா்ஹவுண்ட், வெளிநாட்டு வகையான டாபா்மேன், பீகிள், இங்கிலீஷ் பாய்ண்ட்டா், கோல்டன்ரீட்ரைவா், பீகிள்ஸ், பிரேசிலியன், மஸ்தீப் உள்பட 45 ரகங்களில் 250 நாய்கள் பங்கேற்கவுள்ளன.
ஆஸ்திரேலியா கெனல் நடுவா் மெலேனி கிராத், இந்திய நடுவா்கள் முகமது முனீா், டி.பிரீத்தம் நடுவா்களாக கலந்து கொண்டு நாய்களை மதிப்பீடு செய்தனா்.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நீலகிரி கெனல் சங்க தலைவா் லஜபதி, செயலா் விவேக் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். கண்காட்சியில் வெற்றி பெறும் நாய்களின் உரிமையாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.