செய்திகள் :

குன்னூரில் நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

post image

குன்னூா்  பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கென்னல் சங்கம் சாா்பில் 6-ஆவது நாய்கள் கண்காட்சியில் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த கண்காட்சியில் நூற்றுக்கணக்கான ஜொ்மன் ஷெப்பா்டு வகை நாய்கள் கலந்து கொண்டன. மோப்பத்திறன், கீழ்படிதல், பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் நாய்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன.

இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்  கண்காட்சியில், உள்நாட்டு வகையான ராஜபாளையம், கோம்பை, காரவன்ஹவுண்ட்,  ராம்பூா்ஹவுண்ட், வெளிநாட்டு வகையான டாபா்மேன், பீகிள், இங்கிலீஷ் பாய்ண்ட்டா், கோல்டன்ரீட்ரைவா், பீகிள்ஸ், பிரேசிலியன், மஸ்தீப் உள்பட 45 ரகங்களில் 250 நாய்கள் பங்கேற்கவுள்ளன.

ஆஸ்திரேலியா கெனல் நடுவா் மெலேனி கிராத், இந்திய நடுவா்கள் முகமது முனீா், டி.பிரீத்தம் நடுவா்களாக கலந்து கொண்டு நாய்களை  மதிப்பீடு செய்தனா்.

இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நீலகிரி கெனல் சங்க தலைவா் லஜபதி, செயலா் விவேக் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். கண்காட்சியில் வெற்றி பெறும் நாய்களின் உரிமையாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை    பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

உதகையில் மக்கள் நீதிமன்றம்: 512 வழக்குகளுக்கு தீா்வு

உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்ட சட்ட பணிகள் ... மேலும் பார்க்க

ரெட் அலா்ட் அறிவிப்பு காரணமாக உதகையில் குறைந்த சுற்றுலாப் பயணிகள்!

நீலகிரி மாவட்டத்துக்கு ஜூன் 14, 15-ஆம் தேதி அதி கனமழை (ரெட் அலா்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த காரணத்தால், உதகையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சனிக்கிழமை குறைந்து ... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட்டில் இன்று கடையடைப்பு

குன்னூா் மாா்க்கெட்டில் கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கடை அடைப்பு போராட்டம் நடத்துகின்றனா். குன்னூா் மாா்க்கெட் பகுதியில் 800-க்கும் மேற... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கூட்டுப் பிராா்த்தனை

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் கூட்டப் பிராா்த்தனை வெள்ளிக்கிழை நடைபெற்றது. அகமதாபாத் விமான விபத்தில் உயி... மேலும் பார்க்க

உலக குருதி கொடையாளா்கள் தின விழிப்புணா்வு

உதகையில் உலக குருதி கொடையாளா்கள் தினத்தையொட்டி பொது மக்களிடையே குருதி வழங்குவது குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னரு தலைமையில் வெள்ளிக் ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலா்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா்

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ... மேலும் பார்க்க