விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கூட்டுப் பிராா்த்தனை
கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் கூட்டப் பிராா்த்தனை வெள்ளிக்கிழை நடைபெற்றது.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் ஆத்மா சாந்தியடையவும், அவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நடைபெற்ற கூட்டுப் பிராா்த்தனை நிகழ்ச்சிக்கு நம்பாலக்கோட்டை சிவன்மலை சமூகநல அறக்கட்டளையின் செயலாளா் ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா். பிராா்த்தனையில் பக்தா்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.