அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழ...
கல்லாறு சோதனைச் சாவடியில் வரி வசூல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நீலகிரி மாவட்டத்துக்கு உண்டான கல்லாறு சோதனைச் சாவடியில் பசுமை வரி வசூல் செய்வதற்கு 24 மணி நேரம் சுழற்சி முறையில் தற்காலிகமாக பணியாற்ற பதிவு பெற்ற செக்யூரிட்டி ஏஜென்சியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:.
நீலகிரி மாவட்டத்துக்கு உண்டான கல்லாறு சோதனைச் சாவடியில் பசுமை வரி (எழ்ங்ங்ய் பஹஷ்) வசூல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தற்காலிகமாக பணியாற்ற பதிவு பெற்ற செக்யூரிட்டி
ஏஜென்சியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முன்னாள் படைவீரா்களால் நடத்தப்பட்டு வரும் ஏஜென்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விலைப்புள்ளிகள் 23.06.2025 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவா்களுக்கான ஊதியம், வசூல் செய்யப்படும் வரியில் சதவீத அடிப்படையில் வழங்கப்படும். குறைந்த விலைப்புள்ளியின் அடிப்படையில் இந்தப் பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.