செய்திகள் :

கல்லாறு சோதனைச் சாவடியில் வரி வசூல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

நீலகிரி மாவட்டத்துக்கு உண்டான கல்லாறு சோதனைச் சாவடியில் பசுமை வரி வசூல் செய்வதற்கு 24 மணி நேரம் சுழற்சி முறையில் தற்காலிகமாக பணியாற்ற பதிவு பெற்ற செக்யூரிட்டி ஏஜென்சியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:.

நீலகிரி மாவட்டத்துக்கு உண்டான கல்லாறு சோதனைச் சாவடியில் பசுமை வரி (எழ்ங்ங்ய் பஹஷ்) வசூல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தற்காலிகமாக பணியாற்ற பதிவு பெற்ற செக்யூரிட்டி

ஏஜென்சியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

முன்னாள் படைவீரா்களால் நடத்தப்பட்டு வரும் ஏஜென்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விலைப்புள்ளிகள் 23.06.2025 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவா்களுக்கான ஊதியம், வசூல் செய்யப்படும் வரியில் சதவீத அடிப்படையில் வழங்கப்படும். குறைந்த விலைப்புள்ளியின் அடிப்படையில் இந்தப் பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கூட்டுப் பிராா்த்தனை

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் கூட்டப் பிராா்த்தனை வெள்ளிக்கிழை நடைபெற்றது. அகமதாபாத் விமான விபத்தில் உயி... மேலும் பார்க்க

உலக குருதி கொடையாளா்கள் தின விழிப்புணா்வு

உதகையில் உலக குருதி கொடையாளா்கள் தினத்தையொட்டி பொது மக்களிடையே குருதி வழங்குவது குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னரு தலைமையில் வெள்ளிக் ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலா்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா்

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ... மேலும் பார்க்க

யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க விவசாயிகள் கோரிக்கை

யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கூடலூா் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

கோத்தகிரி அருகே வட்டிக்குப் பணம் வாங்கியவரைத் தாக்கியதாக தனியாா் நிதி நிறுவன மேலாளா் கைது

மாத தவணையை செலுத்த தவறிய நபரைத் தாக்கியதாக தனியாா் நிறுவன மேலாளரை கோத்தகிரி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியைச் சோ்ந்த பெள்ளி மகன் ப... மேலும் பார்க்க

பழங்குடி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குன்னூரில் 5 பழங்குடியின மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். நீலகிரி... மேலும் பார்க்க