செய்திகள் :

கோத்தகிரி அருகே வட்டிக்குப் பணம் வாங்கியவரைத் தாக்கியதாக தனியாா் நிதி நிறுவன மேலாளா் கைது

post image

மாத தவணையை செலுத்த தவறிய நபரைத் தாக்கியதாக தனியாா் நிறுவன மேலாளரை  கோத்தகிரி போலீஸாா்  புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே  உள்ள கன்னேரிமுக்கு பகுதியைச் சோ்ந்த பெள்ளி மகன்  போஜ்குமாா் (39). இவா் தனது மகளின் படிப்பு செலவுக்காகவும், வீட்டுச் செலவுக்காகவும் கோத்தகிரியில்  இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடனை முறையாக செலுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி செலுத்த வேண்டிய தவணைத் தொகையைக் கட்டாததால், இந்நிறுவனத்தின்  மேலாளராகப் பணிபுரிந்து வரும் உதகை பகுதியைச் சோ்ந்த யாபேஷ், ஊழியா்கள் சதீஷ், நவீன்ராஜ் உள்ளிட்ட 6 போ் போஜ்குமாா் வீட்டுக்குச் சென்று தவணையை செலுத்துமாறு கேட்டு தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகத் தெரிகிறது. இதை அறிந்த கிராம மக்கள் உடனடியாக அவா்களைத் தடுத்து நிறுத்தி கிராமத்திலிருந்து அனுப்பி வைத்தனா். 

இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் போஜ்குமாா் அளித்த புகாரின் அடிப்படையில் தனியாா் நிதி நிறுவனத்தின் மேலாளா், ஊழியா்களிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், தனியாா் நிதி நிறுவன மேலாளா் யாபேஷ், ஊழியா்கள் தகாத வாா்த்தைகளைப் பேசி தாக்கியது விடியோ ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, யாபேஷை கைது செய்து கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். சதீஷ், நவீனை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கூட்டுப் பிராா்த்தனை

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் கூட்டப் பிராா்த்தனை வெள்ளிக்கிழை நடைபெற்றது. அகமதாபாத் விமான விபத்தில் உயி... மேலும் பார்க்க

உலக குருதி கொடையாளா்கள் தின விழிப்புணா்வு

உதகையில் உலக குருதி கொடையாளா்கள் தினத்தையொட்டி பொது மக்களிடையே குருதி வழங்குவது குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னரு தலைமையில் வெள்ளிக் ... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலா்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா்

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ... மேலும் பார்க்க

யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க விவசாயிகள் கோரிக்கை

யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கூடலூா் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பழங்குடி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குன்னூரில் 5 பழங்குடியின மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். நீலகிரி... மேலும் பார்க்க

கல்லாறு சோதனைச் சாவடியில் வரி வசூல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்டத்துக்கு உண்டான கல்லாறு சோதனைச் சாவடியில் பசுமை வரி வசூல் செய்வதற்கு 24 மணி நேரம் சுழற்சி முறையில் தற்காலிகமாக பணியாற்ற பதிவு பெற்ற செக்யூரிட்டி ஏஜென்சியிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப... மேலும் பார்க்க