குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
உலக குருதி கொடையாளா்கள் தின விழிப்புணா்வு
உதகையில் உலக குருதி கொடையாளா்கள் தினத்தையொட்டி பொது மக்களிடையே குருதி வழங்குவது குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னரு தலைமையில் வெள்ளிக் கிழமை நடை பெற்றது.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி செவிலியா், மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா் குருதி கொடை அளிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் கீதா லட்சுமி, மருத்துவா்கள், செவிலியா், மாணவ, மாணவிகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.