உதகையில் மக்கள் நீதிமன்றம்: 512 வழக்குகளுக்கு தீா்வு
உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்ட நீதிமன்றம், குன்னுாா், கோத்தகிரி, கூடலுாா், பந்தலுாா் ஆகிய தாலுகா நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி முரளிதரன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தாா். இதில் மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா், குடும்ப நீதிமன்ற நீதிபதி லிங்கம், தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் சசிகலா, சாா்பு நீதிபதி பாரதி பிரபா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி
பிரகாஷ், குற்றவியல் நீதித்துறை நடுவா் ரவி, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி சோழியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள்,
குடும்ப தகராறு வழக்குகள், நிலப் பிரச்னை குறித்த வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 1,719 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு ரூ.2 கோடியே 67 லட்சத்து 70,068 மதிப்புடைய 514 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.