செய்திகள் :

தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? - பிரேமலதா சொன்ன பதில்

post image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று (ஜூன் 17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

2016 தேர்தலில் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியை அமைத்ததுப் போல இந்தத் தேர்தலில் விஜய்யை வைத்து மக்கள் நலக்கூட்டணி அமைக்கப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த்

அதற்கு பதிலளித்த பிரேமலதா, “ தயவு செய்து கூட்டணி குறித்து கேள்வி கேட்காதீர்கள். எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று நிறைய முறை சொல்லிவிட்டேன்.

தற்போது எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகிறோம். உரிய நேரம் வரும்பொழுது யாருடன் கூட்டணி வைக்கிறோம், எத்தனை தொகுதி, யார் வேட்பாளர்கள் என்பதை சொல்லிவிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து கேப்டன் குறித்து பேசிய அவர், “ கேப்டன் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு  கடினமாகத்தான் இருக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த்

தலைவர் இல்லாமல் இந்தத் தேர்தலை சந்திப்பது மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தாலும் அவருடைய கனவு இலட்சியத்தை வென்று எடுப்போம். வெற்றி கனிகளை அவர் காலடியில் சமர்பிப்போம்.

ஜனவரி 9 ஆம் தேதி நாங்கள் நடத்தும் மாநாட்டில் உங்களுக்கான பதில்கள் எல்லாம் கிடைத்துவிடும்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``44 டிகிரி வெயிலில் விளையும் ஆப்பிள்; ஏக்கருக்கு ரூ.5 லட்சம்..'' - விவரிக்கும் பொறியாளர்

எஞ்சினியர் டு விவசாயிமகாராஷ்டிரா விவசாயிகள் எப்போதும் விவசாயத்தில் புதுமையை புகுத்துவது வழக்கம். சோதனை அடிப்படையில் வெப்பமான பகுதியில் விளையாத பயிர்களைக்கூட தங்களது பகுதியில் விவசாயம் செய்து பார்ப்பது... மேலும் பார்க்க

US: ஈரான் அச்சுறுத்தல்; பாக்., ராணுவ தளபதிக்கு விருந்து.. ட்ரம்ப் வேலை பலிக்குமா?

பஹல்காம் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா கொடுத்த பதிலடி, இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதலை உருவாக்கியது. இரு நாடுகளும் மே 10, 2025-ம் தேதி பேசி ஒரு முடிவுக்கு வர, தாக்குதல் நிறுத்தத்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரவு தூக்கத்தில் இழுத்துக்கொள்ளும் விரல்கள்; நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையா?

Doctor Vikatan:இரவு தூங்கும்போது கால் விரல்கள் இழுத்துக்கொண்டு போவது போல் ஆகிவிடுகிறது. குறிப்பாக, ஏசி போட்டாலோ குளிரான காலநிலையிலோ இந்தப் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. அந்தப் பகுதியை நீவி விட்டால் வி... மேலும் பார்க்க

``சேது சமுத்திரத் திட்டத்தை போல கீழடி அறிக்கையில் வஞ்சிக்கிறார்கள்'' - திமுக ராஜீவ் காந்தி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநில மாணவர் அணிச்செயலாளர் ராஜீவ் காந்தி, "உலகிலேயே நாகரீகத்தை மனிதன் கண்டுபிடித்ததற்கு அடையாளம் இரும்பு கண்டுபிடித்ததுதான். அதன்படி சுமார் 5300 ஆண்டுகளுக்கு மு... மேலும் பார்க்க

Skin Infection: வியர்வை, பூஞ்சைத் தொற்று, அரிப்பு.. இடுக்கு தொடைப் பிரச்னை - தீர்வு என்ன?

கோடைக்காலங்களில் இடுக்குத்தொடை பிரச்னை அதிகமாக ஏற்படும். தொடையும் அதையொட்டிய இடுக்குப்பகுதியும் உரசி உரசி அரிப்பு ஏற்படும். சொரிந்தால் புண்ணாகி விடும்; எரிச்சல் ஏற்படும்; நடப்பதற்கே சிரமமாக இருக்கும்.... மேலும் பார்க்க

``ஜூலை 9 புதுச்சேரியில் முழு பந்த்'' - அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் அறிவிப்பு

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. அதன்படி புதுச்சேரியில் இந்த பந்த் போராட்டத்தை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி ... மேலும் பார்க்க